TA/Prabhupada 1015 - ஜடப்பொருளின் பின்னால் உயிர்சக்தி இல்லாவிட்டால் எதையும் உருவாக்க முடியாது

Revision as of 08:28, 19 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


720200 - Lecture SB 01.01.01 - Los Angeles

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய.
ஜன்மாத்யஸ்ய யதோ 'ந்வயாத் இதரதஷ் சார்தேஷ்வபிஜ்ஞ: ஸ்வராட்
தேனே ப்ரஹ்ம ஹ்ருதா ய ஆதி-கவயே முஹ்யந்தி யத் ஸூரய:
தேஜோ-வாரி-ம்ருதாம் யதா வினிமயோ யத்ர த்ரி-ஸர்கோ 'ம்ருஷா
தாம்னா ஸ்வேன ஸதா நிரஸ்த-குஹகம் ஸத்யம் பரம் தீமஹி
(ஸ்ரீ.பா 1.1.1).

இது ஸ்ரீமத்-பாகவதம் எழுதுவதற்கு முன்பு ஸ்ரீல வ்யாஸதேவர் செய்த பிரார்த்தனை. அவர் வாஸுதேவ பகவானுக்கு தனது வணக்கங்களை வைக்கிறார். 'பகவதே' என்றால் வாசுதேவா என்று அழைக்கப்படும் முழு முதற் கடவுள். அவர் தோன்றினார், கிருஷ்ணர் வசுதேவரின் மகனாக தோன்றினார். எனவே அவர் வாசுதேவா என்று அழைக்கப்படுகிறார். மற்றொரு பொருள் என்னவென்றால், அவர் எல்லாவற்றிலும் பரவுகிறார். எல்லா இடங்களிலும் அவர் இருக்கிறார். எனவே, வாசுதேவா, முழுமுதற் கடவுள், எல்லாவற்றின் தோற்றம். ஜன்மாத்யஸ்ய யதஹ். 'ஜன்மா' என்றால் படைப்பு. இந்த பௌதிக உலகத்தின் உருவாக்கம், அண்ட வெளிப்பாடு என்பது வாசுதேவரிடமிருந்து. 'ஜன்ம-ஆதி' என்றால் படைப்பு, பராமரிப்பு மற்றும் நிர்மூலமாக்கல். இந்த பௌதிக உலகில் எதிலும் மூன்று அம்சங்கள் உள்ளன. இது ஒரு குறிப்பிட்ட தேதியில் உருவாக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை ஆண்டுகளாக உள்ளது, பின்னர் அது கரைந்து, நிர்மூலமாக்கப்படுகிறது. இது 'ஜன்மாத்யஸ்ய-ஜன்மஸ்திதி யஹ்' என்று அழைக்கப்படுகிறது. எனவே எல்லாமே முழுமுதற்கடவுளிடம் இருந்து நடைபெறுகின்றன. அண்ட வெளிப்பாடும் அவரிடமிருந்து வெளிப்படுகிறது. இது அவருடைய ஆற்றலில் இருக்கிறது, வெளிப்புற ஆற்றல், அல்லது அது அவருடைய வெளிப்புற ஆற்றலால் பராமரிக்கப்படுகிறது, மேலும், ஜடப்பொருள் அனைத்தும் இறுதியில் கரைந்து, அல்லது அழியும் போது, நிர்மூலமாக்கப்பட்ட பிறகு சக்தி அவருடன் இணைகிறது. சக்தி, ஆற்றல் அவரிடமிருந்து நீட்டிக்கப்பட்டு, அவருடைய ஆற்றலால் பராமரிக்கப்படுகிறது, அது கரைந்ததும் மீண்டும் அது அவருடன் இணைகிறது. இது தான் உருவாக்கம், பராமரிப்பு மற்றும் கரைத்தலுக்கான வழி. இப்போது கேள்வி என்னவென்றால், உயர்ந்த சக்தி அல்லது உயர்ந்த மூலம், அந்த உயர்ந்த மூலத்தின் தன்மை என்ன? இது ஜடப்பொருளா அல்லது உயிர் சக்தியா? "இல்லை, அது ஒரு விஷயமாக இருக்க முடியாது" என்று பாகவதம் கூறுகிறது. ஜடபொருளிலிருந்து எதுவும் தானாக உருவாக்கப்படுவதில்லை. நமக்கு அத்தகைய அனுபவம் இல்லை. இந்த ஜடப்பொருளின் பின்னால் சில உயிர் சக்திகள் இல்லாவிட்டால் எதையும் உருவாக்க முடியாது. நமக்கு அத்தகைய அனுபவம் இல்லை. எந்த பொருளையும் போலவே,....மோட்டார் காரை எடுத்து கொள்ளுங்கள். அதில் சூட்சும இயந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளது. என்ன இருந்தாலும் மோட்டார் கார் தானாக நகர முடியாது. ஒரு ஓட்டுநர் இருக்க வேண்டும். ஓட்டுநர் ஒரு உயிர்சக்தி. எனவே, எல்லாவற்றின் மூலமும் ஒரு உயிர்சக்தியாக இருக்க வேண்டும். இது பாகவதத்தின் முடிவு. என்ன வகையான உயிர்சக்தி? அதாவது அவருக்கு எல்லாம் தெரியும். ஒரு நிபுணத்துவம் கொண்ட மோட்டார் மெக்கானிக்கைப் போலவே, அவருக்கு எல்லாம் தெரியும், எனவே, மோட்டார் கார் நின்று போகும் போது, ​​அவரால் கண்டறிய முடியும், மோட்டார் கார் எவ்வாறு நின்று போனது என்பதை அவர் உடனடியாக கண்டறிய முடியும். எனவே அவர் ஒரு திருகை இறுக்குகிறார், அல்லது ஏதாவது செய்கிறார், அதனால் அது மீண்டும் இயங்க தொடங்குகிறது. ஆகையால் பாகவதம், எல்லா வெளிப்பாடுகளின் மூலம் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறது என்று கூறுகிறது. 'அன்வயாத் இதரதஷ் சார்தேஷு'. நேரடியாகவும் மறைமுகமாகவும். அவர் மிகவும் நிபுணர். நான் இந்த உடலை உருவாக்கியவன் என்பது போல. நான் ஒரு உயிருள்ள ஆன்மா. நான் விரும்பியபடி, நான் இந்த உடலை உருவாக்கியுள்ளேன். ஆற்றலால். என் ஆற்றலால்.