TA/Prabhupada 0084 - கிருஷ்ணர் பக்தராக மட்டும் மாறுங்கள்



Lecture on BG 2.22 -- Hyderabad, November 26, 1972

நமது ஆய்வுப்பொருள் என்பது, கிருஷ்ணாவிடம் இருந்து அறிவை பெறுவதே, கிருஷ்ணா, அவர் மிக உன்னதமானவர். மிக உயர்ந்த கடவுள். நாம் பிழையே இல்லாத சாஸ்திரங்களை ஏற்று கொண்டுள்ளோம். அதில் தவறு எதும் இல்லை. நான் மாட்டு கொட்டகையின் அருகில் நடந்து செல்லும் போது, பசுவின் சாணம் அங்கு கிடந்தது. என்னை தொடர்ந்து வந்தவர்களுக்கு நான் விளக்கியது என்னவென்றால், ஒரு மனிதனுடைய கழிவு அங்கே கிடக்கும் என்றால், யாரும் அங்கே வர மாட்டார்கள்.. யாருமே அங்கே வர மாட்டார்கள். ஆனால், பசுவின் சாணம் அங்கு நிறையவே கிடக்கிறது. ஆனாலும் கூட, நாம் அதன் வழியாக செல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் பசுவின் சாணம் மிக தூய்மை ஆனது என்று வேதங்கள் சொல்கிறது. அதுவே சாஸ்திரம். அது எப்படி ? அது ஒரு மிருகாத்தின் சாணம் என்று நீங்கள் வினவலாம். ஆனால் வேதங்களின் அறிவு மிக சரியானது. விவாதங்களின் போது மிருகத்தின் சாணம் எவ்வாறு தூய்மையானது என்று நாம் நிரூபிக்க முடியாமல் போகலாம்.. ஆனாலும் அது தூய்மையானது தான். ஆகவே வேதங்களின் பொருள் மிக சரியானது. வேதங்களின் அறிவை நாம் எடுத்து கொண்டால், ஆராய்ச்சிக்காக நாம் செலவு செய்யும் அதிக நேரங்களை சேமிக்கலாம். நாம் ஆராய்ச்சியில் அதிக பற்று கொண்டுள்ளோம். அனைத்துமே வேதங்களில் இருக்கிறது. அனைத்துமே வேதங்களில் இருக்கும் பொழுது நீங்கள் ஏன் உங்கள் நேரத்தை வீண் செய்கிறீர்கள்? வேதத்தின் அறிவு என்பது, கடவுளால் சொல்ல பட்டது. அதுவே வேத அறிவு அபோறுṣஏய அது என்னைப்போல ஒரு சாதாரண மனிதனால் சொல்ல பட்டது அன்று. வேதத்தின் கூற்றுகளை நாம் ஏற்றுக்கொண்டால், கிருஷ்ணர் அல்லது அவருடைய தூதுவர்கள் மூலமாகவோ சொல்லிய உண்மைகளையோ நாம் ஏற்று கொண்டால், கிருஷ்ணாவினுடைய தூதுவர்கள், கிருஷ்ணருடய கூற்றை தவிர வெறும் எதையும் பேச மாட்டார்கள். அதனாலேயே அவர்கள் கிருஷ்ணருடைய தூதுவர்கள். கிருஷ்ண பக்தி உடையவர்கள் கிருஷ்ணருடைய தூதுவர்கள். கிருஷ்ண பக்தி உடையவர்கள், கிருஷ்னாவை தவிர வேறு எந்த ஒரு தேவை இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் பேச மாட்டார்கள். இதுவே வித்தியாசம். ஒழுங்கினம் இல்லாதவர்கள், உபயோகம் அற்றவர்கள் எல்லாம் கிருஷ்னாவை தவிர்த்து மற்றவற்றை பேசுவார்கள். கிருஷ்ணர் சொல்கிறார், மன்-மன்ā பாவ மாட்-பாக்டோ மாட்-ய்āஜுī ம்āṁ நமஸ்கூறு (ப்க் 18.65), ஆனால் இந்த படித்த உபயோகமற்றவன் சொல்லுவான், அது கிருஷ்ணாவிற்கு இல்லை.. அது வேறு என்று. இதை எங்கிருந்து பெற்றீர்கள்? கிருஷ்ணா நேரடியாக சொல்கிறார், மன்-மன்ā பாவ மாட்-பாக்டோ மாட்-ய்āஜுī ம்āṁ நமஸ்கூறு (ப்க் 18.65). ஆகவே, நீங்கள் என் வேறு படுகிறீர்கள்? நீங்கள் ஏன் வேறு எதை பற்றியோ சொல்கிறீர்கள்? கிருஷ்ணருக்குள் வேறு எதாவது இருக்கிறதா? நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை இங்கே நிறைய படித்த கயவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் திரித்து கூறுவார்கள். ஆகவே பகவத் கீதை இந்தியாவின் அறிவு புகட்ட கூடிய புத்தகமாக இருந்தாலும் கூட, இந்த மேதைகள் என்று அழைக்க பாடுபபவர்களால் அதிகமான மக்கள் தவறான முறையேலேயே வழி நடத்தப்பட்டு இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் தவறான விளக்கங்களயே அளிக்கின்றனர். ஆகவே, பகவத் கீதை சொல்லப்பட்ட மாதிரியே நாம் அளிக்கின்றோம். கிருஷ்ணா சொல்கிறார், சர்வ-தர்ம்āன் பரிதியஜ்ய ம்āம் ஏகṁ śஆரṇஅṁ விரஜா (ப்க் 18.66). நாம் இந்த சமயக் கோட்பாட்டுமுறையை போதிப்பதாக சொல்கிறோம். "கிருஷ்ண பக்தியோடே இருங்கள்" கிருஷ்ண பக்தர் ஆகுங்கள். உங்கள் மரியாதைகளை வழங்குங்கள்.." கிருஷ்ண பக்தர் ஆகுங்கள். உங்கள் மரியாதைகளை வழங்குங்கள்.." ஏதாவது சேவையை பெற, நீங்கள் யாருக்காவது முகப்புகழ்ச்சி செய்ய வேண்டும். நீங்கள் நல்ல நிலையில் இருந்தாலும், நீங்கள் முகத்துதி செய்ய வேண்டும். ஒரு தேசத்தின் ஜனாதிபதி ஆனாலும் கூட உங்களுடைய நாட்டு மக்களிடம் முகத்துதி செய்ய வேண்டும்.. "தயவு செய்து எனக்கு ஓட்டு அளியுங்கள்" நான் உங்களுக்கு நிறைய வசதிகள் செய்து தருவேன்" ஆகவே, நீங்கள் முகத்துதி செய்யவேண்டும். அதுவே உண்மை. நீங்கள் மிகப் பெரிய மனிதராக இருக்கலாம். ஆனாலும் நீங்கள் முகத்துதி செய்துதான் ஆகா வேண்டும். நீங்கள் ஒருவரை குருவாக ஏற்று கொள்ள வேண்டும். . ஏன் மிக பெரிய குருவான கிருஷ்னாவை ஏற்று கொள்ள கூடாது? அதில் என்ன சிரமம் இருக்கிறது?? இல்லை. கிருஷ்னாவை தவிர நான் ஆயிரமாயிரம் குருக்களை ஏற்று கொள்ளுவேன். இதுவே நமது தத்துவம். இல்லை. கிருஷ்னாவை தவிர நான் ஆயிரமாயிரம் ஆசிரியர்களை ஏற்று கொள்ளுவேன். இதுவே எனது தீர்மானம். பிறகு நீங்கள் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? சந்தோஷத்தை அடைவது என்பது கிருஷ்ணவை ஏற்றுக்கொள்வது என்பது மட்டுமே. போக்கித்āராṁ யாஜ்ñஅ-தாப்பச்āṁ சர்வ-லோக-மேஹீśவாரம் ஸṛதாṁ சர்வ-ப்ūத்āன்āṁ ஜுñāடீவீā ம்āṁ śāந்த்தீம் ṛக்ச்ாத்தி (ப்க் 5.29) இதுவே சாந்தி. நான் தான் களிப்பு உடையவனாக இருக்கிறேன், நீங்கள் இல்லை என்பதை ஏற்று கொள்ள வேண்டும் நீங்கள் மகிழ்ச்சி அடைப்பவர் அல்ல. நீங்கள் ஒரு நாட்டின் ஜனாதிபதி,அலுவலர் அல்லது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒருபோதும் மகிழ்ச்சி அடைப்பவர் அல்ல. கிருஷ்ணா ஒருவரே அனைத்தையும் ஆனந்திப்பவர். இதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆந்திரவில் பேரிடற்காப்பு குழுவீர்க்கு பதில் கடிதம் எழுதினேன். கிருஷ்ணா திருப்தி அடையவில்லை என்றால், இந்த பேரிடர் குழு என்ன செய்ய இயலும்? பணம் திரட்டுவதை தவிர? இல்லை. அதற்கு வாய்ப்பே இல்லை. இப்பொழுது அங்கே மழை பொழிக்கிறது. நீங்கள் பயன் பெறுவீர்கள். ஆனால் அந்த மழை கிருஷனாவை சார்ந்தே உள்ளது. உங்களின் பணம் திரட்டும் ஆற்றலை பொறுத்து அல்ல.