TA/Prabhupada 0474 - ஆரியர்கள் என்றால் வளர்சியடைந்தவர்கள் என்று பொருள்.



Lecture -- Seattle, October 7, 1968

வேதாந்தம் அறிவுறுத்துகிறது "இப்போது நீங்கள் பிரம்மனின் விசாரணையைப் பற்றி எடுத்துக் கொள்ளுங்கள்" என்று. அதாதோ பிரம்ம ஜிஜ்னாசா. நாகரிக ஆண்கள் அனைவருக்கும், இது பொருந்தும். ஐரோப்பாவில், ஆசியாவில், இருக்கும் அமெரிக்கர்களைப் பற்றி நான் பேசவில்லை. எங்கும். ஆரியர்கள் என்றால் முன்னேறியவர்கள் என்று பொருள். ஆரியர் அல்லாதவர்கள் என்றால் முன்னேறாதவர்கள் ... இது சமஸ்கிருத பொருள், ஆர்ய. மற்றும் சூத்திரர்கள் ... ஆரியர்கள் நான்கு சாதிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். மிகவும் புத்திசாலித்தனமான வர்க்கம் பிராமணர் என்று அழைக்கப்படுகிறது ... பிராமணர்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் நிர்வாகிகள், அரசியல்வாதிகள், அவர்கள் க்ஷத்திரியர்கள். அவர்களுக்கு அடுத்ததாக வணிக வர்க்கம், வர்த்தகர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள், நிர்வாக வகுப்பை விட தாழ்ந்தவர்கள். அதற்கும் தாழ்ந்தவர்கள், சூத்திரர்கள். சுத்ரா என்றால் தொழிலாளி, வேலையாள் என்று பொருள். எனவே இந்த அமைப்பு புதியதல்ல. இது எல்லா இடங்களிலும் உள்ளது. மனித சமூகம் எங்கிருந்தாலும், இந்த நான்கு வகுப்பு ஆண்களும் இருக்கிறார்கள். சில நேரங்களில் என்னிடம், இந்தியாவில் சாதி அமைப்பு ஏன் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. சரி, இந்த சாதி அமைப்பு அடிப்படியாக இருக்கிறது. இது இயற்கையாக எற்பட்டது. பகவத்-கீதை கூறுகிறது, சாதுர்-வரண்யம் மாயா ஷ்ரஷ்டம் குண-கர்ம-விபாகஷா: (ப கீ 4.13) "இந்த நான்கு வகுப்பு ஆண்கள் அதில் இருக்கிறார்கள். அதுதான் எனது சட்டம்." அவை எவ்வாறு நான்கு வகுப்புகளாகும்? குண-கர்ம-விபாகஷா:. குணா என்றால் தரம், மேலும் கர்மா என்றால் வேலை என்று பொருள். நீங்கள் மிகவும் நல்ல தரம், புத்திசாலித்தனம், பிராமண குணங்கள் பெற்றிருந்தால் ... பிராமண குணங்கள் என்றால் நீங்கள் உண்மையை பேசினால், நீங்கள் மிகவும் சுத்தமானவர் மேலும் நீங்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்கிறீர்கள், உங்கள் மனம் சமநிலையில் உள்ளது, நீங்கள் சகிப்புத்தன்மை கொண்டவர், மற்றும் பல தகுதிகள்... நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள், உங்களுக்கு வேதங்களைப் பற்றி நடைமுறையில் தெரியும். இந்த குணங்கள் உயர் வகுப்பினருக்கானவை, பிராமண. ஒரு பிராமணரின் முதல் தகுதி அவர் உண்மையுள்ளவர் என்பதுதான். அவர் தனது எதிரிக்கு கூட எல்லாவற்றையும் வெளிப்படுத்துவார். அவர் ஒருபோதும் எதையும் மறைக்க மாட்டார், என்றுதான் சொல்ல வேண்டும். சத்யம். சவுச்சம், மிகவும் சுத்தமான. ஒரு பிராமணர் தினமும் மூன்று முறை குளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மற்றும் ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்வார்கள். பாஹ்யாபந்தர, வெளியே சுத்தம், உள்ளே சுத்தம். இவை குணங்கள். அதனால்... இந்த வாய்ப்புகள் அங்கே இருக்கும்போது, ​​பிறகு வேதாந்த சூத்திர, வேதாந்தம் அறிவுரை கூறுகிறது "இப்போது நீங்கள் பிரம்மத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்குங்கள்" என்று. அதாதோ பிரம்ம ஜிக்ஞாஸா. அதாத்தோ பிரம்ம ஜிக்ஞாஸா. பௌதிக முழுமையை ஒருவர் அடைந்தவுடன், அடுத்த வேலை விசாரிப்பதாகும். நாம் விசாரிக்காவிட்டால், பிரம்மம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்றால், நாம் விரக்தியடைய வேண்டிருக்கும். ஏனெனில் வலுவான ஆசை இருக்கிறது, அதுவே முன்னேற்றம், அறிவின் முன்னேற்றம். அறிவின் முன்னேற்றக் கோட்பாடு, யாரும் திருப்தி அடையக்கூடாது என்பது. அறிவால், அவர் ஏற்கனவே அறிந்தவை. அவர் மேலும் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே உங்கள் நாட்டில், தற்போதைய காலத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நீங்கள் பொருள் வளத்தில் மிக நேர்த்தியாக முன்னேறியுள்ளீர்கள். இப்போது நீங்கள் இந்த பிரம்ம-ஜிஜ்னாசாவுக்குச் செல்லுங்கள், பூரண பரமத்தைப் பற்றிய விசாரணையில் ஈடுபடுங்கள். அது என்ன பூரணமானது ? நான் என்ன? நானும் பிரம்மன். ஏனென்றால் நான் பிரம்மத்தின் அங்க உறுப்பு, ஆகையினால் நானும் பிரம்மன். அங்க உறுப்பைப் போல், தங்கத்தின் ஒரு சிறிய துகள் கூட தங்கம் தான். அது வேறு அல்ல. அதேபோல், நாமும் பிரம்மம் அல்லது பூரணத்தின் துகள். சூரிய ஒளியின் மூலக்கூறுகளைப் போலவே, அவை சூரிய பூகோளத்தைப் போலவே ஒளிரும், ஆனால் அவை மிகச் சிறியவை. அதேபோல், நாம் ஜீவாத்மாக்கள், நாமும் கடவுளைப் போலவே இருக்கிறோம். ஆனால் அவர் சூரிய பூகோளம் அல்லது சூரிய கோளத்தில் உள்ள ஸ்ரீ மூர்த்தி போன்ற பெரியவர், ஆனால் நாம் சிறிய துகள்கள், சூரிய ஒளியின் மூலக்கூறுகள். இதுவே இறைவனுக்கும் நமக்கும் இடையிலான ஒப்பீடு.