TA/Prabhupada 0544 - நாங்கள் முக்கியமாக பக்திசித்தாந்த சரஶ்வதி தாகூரரின் இயக்கப் பணிகளை வலியுறுத்துகிறோ



His Divine Grace Srila Bhaktisiddhanta Sarasvati Gosvami Prabhupada's Appearance Day, Lecture -- Mayapur, February 21, 1976

பிரபுபாதர்: இன்று, நமது முன்னோடி ஆன்மீக குருவின் புனித நாள், ஓம் விஸ்ணுபாத பரமஹம்ஸ பரிவ்ராஜகாச்சார்யா அஷ்டோத்தர-ஷத ஸ்ரீமத் பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் பிரபுபாத. ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் தலையான பணி... அவரது வாழ்க்கையைத் தவிர, பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் பணியை நாம் குறிப்பாக வலியுறுத்துகிறோம். இந்த இடம், மாயாபூர், முன்பு மியாபுரா என்று அழைக்கப்பட்டது. பெரும்பாலும் இது முகமதியர்களால் வசிக்கப்படுகிறது. எப்படியோ, அது மாயாபூருக்கு பதிலாக, மியாபுரா என்ற பெயர் மாற்றப்பட்டது. இன்னும், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பிறந்த இடம் எங்கே என்று மக்கள் மிகவும் சந்தேகிக்கின்றனர். மேலும், பக்திவினோத தாகூர் உண்மையான இடத்தைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். எனவே ஜகந்நாத தாசா பாபாஜி மகாராஜாவின் வழிகாட்டுதலில், இந்த தற்போதைய யோகபீட்டா ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பிடமாக கண்டறியப்பட்டது. எனவே ஆரம்பத்தில், பக்திவினோத தாகூர் இந்த இடத்தை மிகவும் மகிமையுடன் வளர்க்க விரும்பினார், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் புனித பெயருக்கு பொருத்தமாக. எனவே அவர் மாயாபூரை வளர்க்கும் இந்த இயக்கத்தைத் தொடங்கினார். அவரால் அதை முடிக்க இயலவில்லை, எனவே அது பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே அவருடைய முயற்சியின் கீழ், அவருடைய சீடர்களின் உதவியுடன், இந்த இடம் படிப்படியாக உருவாக்கப்பட்டது, இந்த இடத்தை மேலும் முன்னேற்றுவது எங்களின் முயற்சி. எனவே இந்த கோயிலுக்கு மாயாபூர் சந்திரோதயா என்று பெயரிட்டுள்ளோம். இந்த இடத்தை நேர்த்தியாகவும் மகிமையுடனும் வளர்ப்பதற்கான பெரிய லட்சியம் எங்களுக்கு உள்ளது, அதிர்ஷ்டவசமாக நாங்கள் இப்போது வெளிநாடுகளுடன், குறிப்பாக அமெரிக்கர்களுடன் இணைந்து பணிபுரிகிறோம். அமெரிக்கர்கள் இங்கு வருவார்கள் என்பதும் இந்த இடத்தை அபிவிருத்தி செய்வதற்கும், அவர்கள் இந்தியர்களுடன் சேர்ந்து கோஷமிடுவதற்கும் நடனமாடுவதற்கும் அமெரிக்கர்கள் இங்கு வருவார்கள் என்பது பக்திவிநோத தாகூரின் பெரும் ஆசை, எனவே அவரது கனவு மற்றும் சைதன்ய மகாபிரபுவின் முன்னறிவிப்பு,

ப்ருதிவீதே ஆச்சே யத நகராதி கிராம
ஸர்வத்ர ப்ரச்சார ஹைபே மோரா நாம
(CB Antya-khaṇḍa 4.126 )

எனவே அனைத்து இந்தியர்களும் பங்கேற்க வேண்டும் என்று சைதன்ய மகாபிரபு விரும்பினார்.

பாரத பூமிதே மனுஷ்ய-ஜன்ம ஹைல யார
ஜன்ம சார்தக கரிகரோ பர-உபகார.
(CC Adi 9.41)

இது சைதன்யா மகாபிரபுவின் பணி, பரா-உபகார. பர-உபகார என்றால் மற்றவர்களுக்கு நல்லது செய்வது. நிச்சயமாக, மனித சமுதாயத்தில் பல்வேறு கிளைகள் உள்ளன மற்றவர்களுக்கு நல்லது செய்வதற்கான - நலன்புரி சங்கங்கள் - ஆனால் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ... ஏன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ? கிட்டத்தட்ட முற்றிலும், இந்த உடல் தான் தனது அடையாளம் என்று கொண்டுள்ளனர், உடலுக்கு சில நன்மைகளைச் செய்வதே - நலன்புரி நடவடிக்கைகள் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையில் அது நலன்புரி நடவடிக்கைகள் அல்ல ஏனெனில் பகவத் கீதையில் நாம் மிக தெளிவாக புரிந்துகொள்கிறோம், அந்தவந்த இமே தேஹஹ் நித்தியஷியோகதஹ் சரீரினஹ. இந்த உடல் அந்தவத். அந்தா என்றால் அது முடிந்துவிடும். அவரது உடல் நிரந்தரமானது அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்; அது முடிந்துவிடும். பௌதீகமான எதுவும் - பூத்வா பூத்வா பிரலீயதே (BG 8.19) - இது பிறந்த தேதியைக் கொண்டுள்ளது, சிறிது நேரம் இருக்கும், பின்னர் நிர்மூலமாக்குகிறது. எனவே ஆன்மீக கல்வி "நான் இந்த உடல் அல்ல" என்ற புரிதலில் இருந்து தான் தொடங்குகிறது. இது ஆன்மீக கல்வி. பகவத்-கீதையில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கொடுத்த முதல் அறிவுறுத்தல், இது, நாம் இந்த உடல் அல்ல என்று. ஏனென்றால் அர்ஜுனன் உடல் தளத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தான், எனவே கிருஷ்ணர் அவரை கடிந்து கொண்டார், அஸோசயான் அன்வஷோசஸ் த்வம் ப்ரஞ்ஞா -வாதாம்ஸ் ச்ச பாஸசே : (BG 2.11) என்று. "அர்ஜுனா, நீ மிகவும் கற்ற மனிதனைப் போல பேசுகின்றாய், எந்த கற்றவரும் புலம்பாத விஷயத்தைப் நீ புலம்புகின்றாய், அஸோசயான் அன்வஷோசஸ் த்வம்.

எனவே உடல் சம்பந்தப்பட்ட இதுபோன்ற நலன்புரி நடவடிக்கைகள், மருத்துவமனை மற்றும் பல விஷயங்களைப் போல, அவை சந்தேகத்திற்கு இடமின்றி நல்லவை, ஆனால் இறுதி இலக்கு ஆன்மாவின் ஆர்வத்தைக் காண்பது. அதுவே இறுதி இலக்கு. அதுவே முழு வேத போதனை. மேலும் கிருஷ்ணர் இந்த இடத்திலிருந்து தொடங்குகிறார். தேஹினோ அஸ்மின் யதா தேஹி கௌமாரம் யவ்வனம் ஜரா (BG 2.13).