TA/Prabhupada 0603 - இந்த மிருதங்கம் வீடுதோறும் நாடுதோறும் போகும்



Lecture on SB 1.16.8 -- Los Angeles, January 5, 1974

இந்த உயிரினம் எவ்வளவு பாவமானது என்பதைப் பார்ப்பதே யமராஜரின் வேலை, அவருக்கு அதேபோன்ற உடல் வழங்கப்படுகிறது. கர்மனா தைவ-நேத்ரேன (ஸ்ரீமத் பாகவதம் 3.31.1). நாம் ஒவ்வொருவரும் மரணத்திற்குப் பிறகு நியாயந்தீர்க்கப்படுவோம். நிச்சயமாக, அவர் கிருஷ்ணர் பக்தியை தீவிரமாக எடுத்துக் கொண்டால், பாதை தானாகவே அமையும். தானாக நீங்கள் முழுமுதற்கடவுளின் திருநாட்டிற்கு திரும்ப செல்கிறீர்கள். நியாயம் பற்றிய கேள்வி இல்லை. நியாயம் என்பது குற்றவாளிகளுக்கானது, அதாவது கிருஷ்ணர் பக்தி இல்லாத அயோக்கியர்கள். ஆனால் நீங்கள் கிருஷ்ண பக்தியுள்ளவராக இருந்தால், இந்த வாழ்க்கையில் வேலையை முடிக்க முடியாவிட்டாலும், நீங்கள் விழுந்தாலும், மனித உடலுக்கு வர மற்றொரு வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படும், நீங்கள் எங்கு முடித்தீர்களோ, அங்கே - நீங்கள் கீழே விழுந்த இடத்திலிருந்து - தொடங்க. அதாவது ...

ஆகையால் ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் (BG 2.40). நீங்கள் கிருஷ்ண பக்தி கொண்டிருந்தால், அதை மிகவும் தீவிரமாக செயல்படுத்த முயற்சிக்கவும், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி ஹரே கிருஷ்ண என்று நாம சங்கீர்த்தனம் செய்யுங்கள். அவ்வளவுதான் ஐந்து விஷயங்கள். சட்டவிரோத பாலியல் உறவு இல்லை, சூதாட்டம் இல்லை, இறைச்சி சாப்பிடுவதில்லை ... நாங்கள் உடலுறவை தடை செய்யவில்லை, ஆனால் சட்டவிரோத உடலுறவு மிகவும் பாவமானது. மிகவும் பாவம். துரதிர்ஷ்டவசமாக, பலருடன் உடலுறவு கொள்பவர்கள் மிகவும் அயோக்கியர்கள். அதுதான் மாயை, தாக்கம். ஆனால் நீங்கள் கிருஷ்ணருடன் ஒட்டிக்கொண்டால் மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே (பகவத் கீதை .7.14) நீங்கள் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை மிகவும் இறுக்கமாகப் பிடித்து கொண்டால், நீங்கள் கீழே விழ மாட்டீர்கள். ஆனால் நீங்கள் பெயரளவு பிரம்மச்சாரி, பெயரளவு கிரஹஸ்தர் அல்லது பெயரளவு சந்நியாசி என்று காட்டி கொண்டால், நீங்கள் கீழே விழுவீர்கள். நாம் அதை அனுபவத்தில் பார்க்கிறோம். அப்பொழுது நீங்கள் கீழே விழ வேண்டும். ஒரு தவறியவரை, ஒரு போலி பக்தரை கிருஷ்ணர் பொறுத்துக்கொள்ள மாட்டார். மாயா மிகவும் வலிமையானது. உடனே அவரைப் பிடிக்கும்: "வா. நீ ஏன் இங்கே இருக்கிறாய்? நீங்கள் ஏன் இந்த சமூகத்தில் இருக்கிறீர்கள்? வெளியேறுங்கள். " அது யமராஜரின் கடமை. ஆனால் நீங்கள் கிருஷ்ண உணர்வில் இருந்தால், யமராஜர் உங்களைத் தொட மாட்டார் நீங்கள் கிருஷ்ணர் உணர்வைத் தொடங்கும் இடத்திலிருந்து உங்கள் மரணம் நிறுத்தப்படுகிறது. உங்கள் மரணம் நிறுத்தப்பட்டுள்ளது. யாரும் இறக்கத் தயாராக இல்லை. அது ஒரு உண்மை "இல்லை, நான் மரணத்திற்கு பயப்படவில்லை" என்று நான் கூறலாம். அது இன்னொரு அயோக்கியத்தனம். எல்லோரும் மரணத்திற்கு பயப்படுகிறார்கள், யாரும் இறக்க விரும்பவில்லை. அது ஒரு உண்மை. ஆனால், "நான் இறப்பின் செயல்முறையை நிறுத்துவேன்", என்று நீங்கள் அந்த விஷயத்தில் தீவிரமாக இருந்தால் அது கிருஷ்ணர் உணர்வு எனவே

அஹோ ந்ரு-லோகே பீயேத ஹரி-லீலாம்ருதம் வச (SB 1.16.8): . என்று அறிவுறுத்தப்படுகிறது "மனித சமுதாயமே, இந்த உடலை நீங்கள் பெற்றுள்ளீர்கள். கிருஷ்ண-கதாவின் தேனைக் குடித்துக் கொண்டிருங்கள். இது இங்கே அறிவுறுத்தப்படுகிறது. அஹோ ந்ரு-லோகே. குறிப்பாக இது ந்ர-லோகே -விற்கு - மனித சமுதாயத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது நாய்-லோகே அல்லது பூனை-லோகத்திற்கு உரையாற்றப்படவில்லை. அவர்களால் முடியாது. அவர்களுக்கு திறன் இல்லை. எனவே இது: ந்ர-லோகே. நாயம் தேஹோ தேஹ-பாஜாம் ந்ரு-லோகே ஐந்தாம் ஸ்கந்தத்தின் மற்றொரு ஸ்லோகம்: நாயம் தேஹோ தேஹ-பாஜாம் ந்ரு-லோகே,கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே (ஸ்ரீ.மத் பாகவதம் 5.5.1) இவை பாகவதம். எந்த ஒப்பீடும் இல்லை. ஸ்ரீமத்-பாகவதம் போல பிரபஞ்சம் முழுவதும் எந்த இலக்கியமும் இல்லை எந்த ஒப்பீடும் இல்லை. போட்டி இல்லை. ஒவ்வொரு வார்த்தையும் மனித சமுதாயத்தின் நன்மைக்காகவே. ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வார்த்தையும். எனவே புத்தக விநியோகத்தில் நாங்கள் மிகவும் வலியுறுத்துகிறோம் எப்படியாவது, புத்தகம் ஒருவரின் கையில் சென்றால், அவருக்கு நன்மை கிடைக்கும் குறைந்தபட்சம் அவர் பார்ப்பார், "ஓ, அவர்கள் இவ்வளவு விலையை வைத்துள்ளனர். என்ன இருக்கிறது என்று பார்ப்போம்." அவர் ஒரு ஸ்லோகத்தைப் படித்தால், அவரது வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். ஒரு ஸ்லோகம், ஒரு சொல். இது நல்ல விஷயம் எனவே, "தயவுசெய்து புத்தகத்தை விநியோகிக்கவும், புத்தகத்தை விநியோகிக்கவும், புத்தகத்தை விநியோகிக்கவும்" என்று நாங்கள் மிகவும் வலியுறுத்துகிறோம் ஒரு பெரிய மிருதங்கம் . நாம் நாம சங்கீர்த்தனம் செய்கிறோம், நமது மிருதங்கத்தை வாசிக்கிறோம். இது இந்த அறைக்குள் அல்லது இன்னும் கொஞ்சம் தூரம் கேட்.கும். ஆனால் இந்த மிருதங்கம் வீட்டிற்கு வீடு, நாடு நாடாக, சமூகம் சமூகமாக செல்லும், இந்த மிருதங்கம்

எனவே ந்ரு-லோகே. என்று அறிவுறுத்தப்படுகிறது ந்ரு-லோகே. என்பது மனித சமுதாயத்தில், உடலின் மனித வடிவம் என்று பொருள். "இது அமெரிக்க சமூகம்" அல்லது "இது ஐரோப்பிய சமூகம்", "இது இந்திய சமூகம் ..." என்று இல்லை, எல்லா மனிதர்களுக்கும். எல்லா மனிதர்களுக்கும். அவர் என்ன என்பது முக்கியமல்ல. எல்லா மனிதர்களுக்கும். நாகரிக மனிதர்களைப் பற்றி மட்டும் என்ன பேசுவது, நாகரிகமற்ற மக்களும் அனார்யா. அவர்களும் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளனர். கிராத-ஹூணாந்த்ர-புலிந்த-புல்கஷா ஆபீர-ஷும்பா யவனா: கஸாதய: (ஸ்ரீமத் பாகவதம் 2.4.18) இந்த பெயர்கள் உள்ளன. கிராத என்றால் கருப்பு, ஆப்பிரிக்கர்கள். அவை கிராத என்று அழைக்கப்படுகின்றன. கிராத-ஹூண ஆந்த்ர. ஹுன, வட துருவத்தில் உள்ள நாடு அல்லது சமூகம், ரஷ்ய, ஜெர்மன் ஆகியவற்றுக்கு மேல் அவை ஹுன என்று அழைக்கப்படுகின்றன. நமக்குத் தெரியாதவை ஏராளம். கசாதய, மங்கோலியர்கள். கசாதய என்றால் இந்த மங்கோலிய குழு, போதுமான மீசையும் தாடியும் வளர்த்துக்கொள்ளாதவர்கள். கிராத-ஹூணாந்த்ர-புலிந்த-புல்கஷா ஆபீர-ஷும்பா யவனா: கஸாதய:. யவனர்கள் , மிலேச்சர்கள், யவனர்கள் என்றால் முஹம்மதியர் மற்றும் பிறர் என்று பொருள். எனவே அவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். ந்ரு-லோகே ஏனெனில் அது நரலோகம். ஒவ்வொரு மனிதனும். மேலோட்டமாக, வெளிப்புறமாக, , இந்த தேசம் அந்த தேசத்தை விட சிறந்தது என்று இருக்கலாம். அது உண்மை. ஆரியர்கள் மற்றும் ஆரியர் அல்லாதவர்கள். பிளவுகள் உள்ளன: நாகரிகமான, நாகரிகமற்ற; படித்த, படிக்காத; பண்பட்ட, கலாச்சாரமற்ற; கருப்பு வெள்ளை; இது மற்றும் அது. உள்ளன ... வெளிப்புறமாக இவை ... ஆனால் அந்த வேறுபாடு உடலுக்கு.