TA/Prabhupada 0645 - கிருஷ்ணரை உணர்ந்தவன் எப்பொழுதும் பிருந்தாவனத்தில் வசிக்கிறான்



Lecture on BG 6.1 -- Los Angeles, February 13, 1969

பிரபுபாதர்: ஆம, உன் கேள்வி என்ன?


பக்தர்: க்ஷீரோதகஷாயீ என்பவர் கற்களைப் போல் உயிரற்ற பொருட்களிலும் இருக்கிறாரா?


பிரபுபாதா: ஆம்?


பக்தர்: பக்தர்: க்ஷீரோதகஷாயீ விஷ்ணு உயிரற்ற பொருட்களிலும் இருக்கிறாரா?


பிரபுபாதர்: ஆம், ஆம், அணுவிலும் இருக்கிறார்.


பக்தர்: அவர் நான்கு கரங்களுடைய ரூபத்திலா ?


பிரபுபாதர்: ஆமாம்.


பக்தர்: என்ன அவர்...?


பிரபுபாதர்: அவர் எங்கே இருந்தாலும் தன்னுடைய திருவீட்டில் தான் வசிக்கிறார். அணோர் அணீயான் மஹதோ மஹீயான். அவர் பெரியதில் பெரியதும், சிறியதில் சிறியதுமானவர். அது தான் விஷ்ணு. அண்டாந்தர-ஸ்தம்-பரமாணு-சயாந்தர-ஸ்தம் (பிரம்ம ஸம்ஹிதா 5.35). பரமாணு என்றால் அணு. அணு என்பதை கண்களால் காண முடியாதளவுக்கு சிறியது. அந்த ஆணுக்குள் அவர் இருக்கிறார். அவர் எங்கும் இருக்கிறார்.

தமால கிருஷ்ணன்: பிரபுபாதரே, கிருஷ்ணர் எவ்விடத்தில் இருக்கிறாரோ அவ்விடத்தில் பிருந்தாவனம் இருப்பதாக கூறியிருந்தீர்கள். நான் வியந்துருப்பது ஏனென்றால், கிருஷ்ணர் நம் இதையங்களில் இருக்கிறார் என்றால் நம் இதையத்துக்குள்...


பிரபுபாதர்: ஆம். உணர்ந்தவன் எங்கே இருந்தாலும் பிருந்தாவனத்தில் தான் வசிக்கிறான். உணர்ந்தவரின் ஆத்மா எப்பொழுதும் பிருந்தாவனத்தில் தான் வசித்திருக்கும். இவ்வாறு சைதன்ய மஹாபிரபு கூறியிருக்கிறார். கிருஷ்ணரை உணர்ந்தவன் எப்பொழுதும் பிருந்தாவனத்தில் தான் வசிக்கிறான். அவன் வேறு எங்கும் இருப்பதில்லை... எப்படி கிருஷ்ணர் அல்லது விஷ்ணு எல்லோரின் இதையத்திலும் வசிக்கிறார், ஆனால் அவர் நாயின் இதையத்திலும் வசிக்கிறார். அதற்காக அவர் நாய்த்தன்மையில் வசிப்பவர் ஆவாரா? அவர் வைகுண்டத்தில் வசிக்கிறார். அவர் நாயின் இதையத்தில் வசித்திருந்தாலும் அவர் வைகுண்டத்தில் தான் வசிக்கிறார். அதுபோலவே ஒரு பக்தன் ஏதோ ஒரு இடத்தில் வசிப்பதுப் போல் தோன்றலாம். அந்த இடம் பிருந்தாவனத்திலிருந்து மிகு தூரத்தில் இருக்கலாம் ஆனால் அவன் பிருந்தாவனத்தில் தான் வசிக்கிறான். அது உண்மையான விஷயம். ஆம்.