TA/Prabhupada 0785 - ஆன்மிகத் தகுதிபெற்ற சர்வாதிகாரி வழங்கப்பட்டால்- சர்வாதிகாரம் நல்லதே



Press Conference at Airport -- July 28, 1975, Dallas

பிரபுபாதர்: நீங்கள் முடிந்தவரை பௌதிக ரீதியாக முன்னேறலாம், ஆனால் நீங்கள் கடவுள் பக்தி அல்லது கிருஷ்ண பக்தி கொள்ளாவிட்டால், இந்த பௌதிக முன்னேற்றத்தின் மதிப்பு பூஜ்ஜியத்திற்கு சமம். யாரும் திருப்தி அடைய மாட்டார்கள். எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். பௌதிக வசதிகளாலான அமெரிக்க முன்னேற்றத்தின் இறுதித் கட்டம் இது. பின்னர் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அமெரிக்கா ஏற்கனவே உலகின் தலையான நாடாக உள்ளது. அவர்கள் முதல் தரத் தலைவராக இருப்பார்கள். உலகம் பயனடையும், நீங்களும் பயனடைவீர்கள், என் முயற்சியும் வெற்றி பெறும். உங்களை பூஜ்ஜியமாக வைத்திருக்க வேண்டாம். ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அது மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஆன்மீக ஆத்மா இல்லை என்றால் இந்த வாழ்க்கை பூஜ்ஜியமாகும். அதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஒருவர் முக்கியமான மனிதராக இருந்தாலும் ஆன்மீக ஆன்மா உடலுக்கு வெளியே இருக்கும்போது, உடல் ஒரு ஜட பொருள் ஆகும்; அதற்கு எந்த மதிப்பும் இல்லை. நீங்கள் எதை எடுத்தாலும் - இந்த இயந்திரம், அந்த இயந்திரம், எந்த இயந்திரம்— யாரோ, சில ஆன்மீக ஜீவன், சில உயிரினங்கள் அதைச் சமாளிக்கவில்லை என்றால், அதன் மதிப்பு என்ன? மதிப்பில்லை. எனவே, எல்லா இடங்களிலும் இந்த ஆன்மீக உணர்வு இருக்க வேண்டும். இல்லையெனில் அது பூஜ்ஜியமாகும்.

பெண் நிருபர்: எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. இப்போது இந்தியாவின் அரசியல் நிலைமை குறித்து நீங்கள் கருத்து தெரிவிப்பீர்களா? திருமதி காந்தியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ...?

பிரபுபாதா: அரசியல் நிலைமை குறித்து நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை. ஆனால் எங்கள் முன்மொழிவு-அரசியல், சமூக, பொருளாதார அல்லது தத்துவ, எதுவாக இருந்தாலும் - கிருஷ்ணர் இல்லாமல், இது அனைத்தும் பூஜ்ஜியமாகும். திருமதி காந்தியைப் பொருத்தவரை, அவர் சில ஆன்மீக புரிதல்கள் கொண்டிருக்கிறார். உண்மையில் அவர் ஆன்மீக ரீதியில் மிகவும் முன்னேறினால், இந்த அவசர நிலைமை மேம்படும். இல்லையெனில் ... அது ஜனநாயகத்திற்கு எதிரான பொதுக் கருத்தாகும். எனவே ஜனநாயகம் மிகவும் பயனளிக்காது. எங்கும், எல்லா இடங்களிலும் ... உங்கள் நாட்டிலும், நீங்கள் திரு. நிக்சனுக்கு வாக்களித்தீர்கள், ஜனநாயகம், ஆனால் நீங்கள் அவரிடம் திருப்தி அடையவில்லை. அதாவது ஜனநாயகம், சாதாரண மனிதர்கள் யாரையாவது தேர்ந்தெடுக்கிறார்கள், மீண்டும் அவர்கள் அவரை பதவி இறக்க முயற்சிக்கிறார்கள். ஏன்? அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​அது ஒரு தவறு என்று அர்த்தம்.

எனவே வேத நாகரிகத்தின் படி, ஜனநாயகம் என்று எதுவும் இல்லை. முடியாட்சி இருந்தது, ஆனால் முடியாட்சி சமயத்தில் ராஜா மிகவும் ஆன்மீக ரீதியில் முன்னேறியவராக இருந்தார். ராஜா ராஜர்ஷி என்று அழைக்கப்பட்டார், அதாவது ராஜா, அதே நேரத்தில் அவர் ஒரு புனித நபர். நம் நாட்டில் மற்றொரு உதாரணம் கிடைத்துள்ளது - காந்தி. அவர் அரசியல் தலைவராக இருந்தபோது, ​​நடைமுறையில் சர்வாதிகாரியாக இருந்தார், ஆனால் அவர் மிக உயர்ந்த தார்மீக தன்மை கொண்ட மனிதர் என்பதால், மக்கள் அவரை சர்வாதிகாரியாக ஏற்றுக்கொண்டனர். எனவே, சர்வாதிகாரி ஆன்மீக ரீதியில் மிகவும் தகுதியானவராக இருந்தால், சர்வாதிகாரம் நல்லது. அதுவே வேத தீர்ப்பு. குருகசேத்ராவின் போருக்கான காரணம் இறைவன் கிருஷ்ணர் விரும்பினார், ராஜரிஷி, யுதிஷ்டிரா, தலையில் மன்னராக ஆக வேண்டும் என்று. எனவே ராஜா கடவுளின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். எனவே அவர் ஒரு தெய்வீக மனிதராக இருக்க வேண்டும். பின்னர் அது வெற்றிகரமாக இருக்கும்.