TA/Prabhupada 0244 - எங்கள் தத்துவம் யாதெனில் அனைத்துமே பகவானுக்கு சொந்தமானது: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0244 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 6: Line 6:
[[Category:TA-Quotes - in United Kingdom]]
[[Category:TA-Quotes - in United Kingdom]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|French|FR/Prabhupada 0243 - Le disciple approche le guru pour recevoir la connaissance|0243|FR/Prabhupada 0245 - Tout le monde essaie de satisfaire ses propres sens|0245}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0243 - ஒரு சிஷ்யன் குருவிடம் ஞானஒளி பெறுவதற்காக வருகிறான்|0243|TA/Prabhupada 0245 - எல்லோரும் அவன் அல்லது அவள் சொந்த புலன்களைத் திருப்தி படுத்த முயற்ச்சிக்கிறார்கள்|0245}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 17: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|9ZohjKnA8N0|Our Philosophy is that Everything Belongs to God<br />- Prabhupāda 0244}}
{{youtube_right|gxibp_nPjUw|எங்கள் தத்துவம் யாதெனில் அனைத்துமே பகவானுக்கு சொந்தமானது<br />- Prabhupāda 0244}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


Line 29: Line 29:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
மற்றொரு நாளில் பாரிஸ் நகரில் ஒரு பத்திரிகை நிருபர் என்னை சந்திக்க வந்தார் .. சோசிலைஸ்ட் பத்திரிகையை சேர்த்தவர் நான் அவரிடம் கூறினேன். எங்கள் தத்துவம்.. எல்லாமே கடவுளுடையது என்பதே என்று.. கிருஷ்ணர் கூறுகிறார் bhoktāraṁ yajña-tapasāṁ sarva-loka-maheśvaram ([[Vanisource:BG 5.29|BG 5.29]]). "நான் அனுபவிப்பவன் bhoktā"என்றால் அனுபவிப்பவன் bhoktāraṁ yajña-tapasāṁ. இந்த உடம்பு வேலை செய்வது போல அனைவரின் உடலும் முழுமையாக வேலை செய்து கொண்டு தான் இருக்கின்றது.. வாழ்க்கையை அனுபவிக்க.. ஆனால் அந்த மகிழ்ச்சியான  அனுபவம் எங்கிருந்து தொடங்குகிறது ? அந்த மகிழ்ச்சியான அனுபவம் வயிற்றிலிருந்து ஆரம்பமாகிறது வயிற்றுக்கு நீங்கள் சரியான உணவை கொடுக்கவேண்டும் தேவையான அளவு ஆற்றல் இருந்தால் ஜீரணம் செய்ய முடியும். அதன் மூலம் கிடைக்கும் ஆற்றல் எல்லா உறுப்புகளையும் சக்தி பெற செய்கிறது அப்படி இருந்தால், புலன்கள் திருப்தியடையும். இல்லாவிடில் அது சாதியம் இல்லை உன்னால் ஜீரணம் செய்ய முடியாவிட்டால்.. வயதானவர்களை போல.. அப்பொழுது புலனின்பம் கொள்வது பற்றியே கேள்வி இல்லை எனவே புலனின்பம் வயிற்றிலிருந்து ஆரம்பமாகிறது ஒரு மரத்தின் செழிப்பான வளர்ச்சி, அதனின் வேரிலிருந்து கிடைக்கிறது .. அங்கே தேவையான அளவு தண்ணீர் இல்லையென்றால் .. எனவே மரங்களை pada-pa. என்று சொல்கிறோம் அவை தண்ணீரை கால்கள் மூலமாக குடிக்கிறது.. தலையிலிருந்து இல்லை நாம் முகத்தில் இருக்கும் உறுப்பு மூலம் உண்பதை போல.. இங்கே பலவகையான ஏற்பாடுகள் இருக்கின்றது நாம் வாயின் மூலமாக உண்பதை போல.. மரங்கள் அவற்றின் கால்களின் மூலகம உண்கிறது ஆனால் உணவு உட்கொண்டு ஆகவேண்டும் . Āhāra-nidrā-bhaya-maithuna. உணவு உண்பது என்பது இருந்தே ஆகவேண்டும்.. கையால் உண்டாலும், காலால் உண்டாலும்.. கிருஷ்ணரை பொறுத்தவரை.. அவர் எப்படி வேண்டுமானாலும் உண்ணமுடியும் அவர் கையால், வாயால், கண்ணால் , காதால் , எப்படி வேண்டுமானாலும் உண்ண முடியும் அவர் உருவமற்றவர்.. அவரின் கண்ணுக்கும், தலைக்கும், கால்களுக்கும், எந்த வேறுபாடும்இ ல்லை That is stated in the Brahma-saṁhitā, aṅgāni yasya sakalendriya-vṛttimanti paśyanti pānti kalayanti ciraṁ jaganti ānanda-cinmaya-sadujjvala-vigrahasya govindam ādi-puruṣaṁ tam ahaṁ bhajāmi. (Bs. 5.32) எனவே, நம் உடம்பில் புலனின்பம் வயிற்றிலிருந்து தொடங்குகிறது மரம் செழிப்போடு வளர்வது, வேரிலிருந்து ஆரம்பமாவது போல அதே போல கிருஷ்ணர் அனைத்திற்கும் ஆரம்பமானவர் ஆவர்.. anmādy asya yataḥ ([[Vanisource:SB 1.1.1|SB 1.1.1]]), root. கிருஷ்ணர் உணர்வு இல்லாமல்.. கிருஷ்ணரை மகிழ்விக்காமல் நீ சந்தோஷம் கொள்ள இயலாது இது தான் அமைப்பு.. எனவே , கிருஷ்ணரை எப்படி மகிழ்விப்பது? கிருஷ்ணர் எப்பொழுது மகிழ்ச்சி கொள்வார் என்றால்.. நாம் அனைவரும் கிருஷ்ணரின் குழந்தைகள்.. கடவுளின் குழந்தைகள் அனைத்துமே கிருஷ்ணருடைய சொத்து .. இது தான் நிஜம் எனவே நாம் கிருஷ்ணரின் பிரசாதத்தை எடுத்துக்கொள்வது மூலமாக சந்தோஷமடைய முடியும்.. அவனே அனைத்திற்கும் சொந்தக்காரன்.. அனுபவிப்பவன் .. அனைத்தையும் முதலில் கிருஷ்ணருக்கு படைத்துவிட்டு பின்னர் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் .. அது உங்களை மகிழ்ச்சி அடைய செய்யும்... அதை பகவத் கீதையில் சொல்லியிருக்கிறார்கள்.. Bhuñjate te tv aghaṁ pāpaṁ ye pacanty ātma-kāraṇāt: ([[Vanisource:BG 3.13|BG 3.13]]) ஒருவன் தனக்காக மட்டும் சமைத்து உண்கிறான் என்றால் அவன் பாவத்தை உண்கிறான் என்று பொருள்.. Bhuñjate te tv aghaṁ pāpaṁ ye pacanty ātma... Yajñārthāt karmaṇo 'nyatra loko' yaṁ karma... அனைத்துமே கிருஷ்ணருக்காக செய்யவேண்டும்.. உண்பது.. அனைத்துமே அணைத்து புலனின்பமும் நீ பெறலாம்.. கிருஷ்ணர் முதலில் பெற்ற பின்னர் நீ பெற்றால்.. பின்னர் நீ உணவு உண்ணலாம்.. எனவே கிருஷ்ணரின் பெயர் Hṛṣīkeśa .. அவர் தான் அனைத்திற்கும் தலைமையானவர் அனைத்து உணர்வுகளுக்கான தலைவன் அவனே.. நீ மட்டும் உன் உணர்வுகளை தனியாக அனுபவிக்க முடியாது வேலைக்காரன் போல.. வேலைக்காரன் அனுபவிக்க முடியாது.. சமையல் செய்பவன் மிக சுவையான உணவு வகைகளை சமைத்துவிட்டு அவனால் முதலில் உண்ண முடியாததை போல.. அவன் அப்படி செய்யமுடியாது... அவனை வேலையிலிருந்து நீக்கிவிடுவார்கள் தலைமையானவர் முதலில் அனைத்தையும் எடுத்துக்கொண்ட பிறகு மற்றவர்கள் சுவையான உணவை உண்ணமுடியும்
அன்றொரு நாள் பாரிஸ் நகரத்தில் ஒரு பத்திரிகையாளர் என்னை சந்திக்க வந்தார், ஸோஷியலிஷ்ட் பிரெஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர். "எல்லாமே கடவுளுக்குச் சொந்தமானது என்பது தான் எங்கள் தத்துவம்," என்பதை நான் அவருக்கு அறிவித்தேன். கிருஷ்ணர் கூறுகிறார், 'போக்தாரம் யக்ஞ-தபஸாம் ஸர்வ-லோக-மஹேஷ்வரம்' ([[Vanisource:BG 5.29 (1972)|பகவத் கீதை 5.29]]). "நானே அனுபவிப்பவன், போக்தா." போக்தா என்றால் அனுபவிப்பவன். போக்தாரம் யக்ஞ-தபஸாம். இந்த உடலைப் போல் தான். உதாரணத்திற்கு, இந்த உடலின் பாகங்கள் அனைத்தும் உழைக்கின்றன. எதற்காக? வாழ்க்கையில் இன்பம் பெறுவதற்காக தான். அனைவருக்கும் அப்படித்தான். ஆனால் அந்த இன்பத்தின் தொடக்கம் எங்கே? அந்த இன்பத்தின் தொடக்கம் வயிற்றிலிருந்து தான். வயிற்றுக்கு நீங்கள் தேவையான அளவுக்கு நல்ல உணவை கொடுக்க வேண்டியிருக்கிறது. தேவையான அளவு சக்தி இருந்தால்தான் நம்மால் ஜீரணம் செய்ய முடியும், அப்போது தான் மற்ற புலன்களுக்கும் அனுபவிப்பதற்கு தேவையான சக்தி கிடைக்கும். பிறகு உங்களால் புலனின்பத்தை அனுபவிக்க முடியும். இல்லாவிடில் அது சாதியம் இல்லை. உங்களால் உணவை செரிக்க முடியாவிட்டால்... எனக்கு வயதாகிவிட்டது, என்னால் சரியாக செரிக்க முடியாது. ஆக எனக்கு புலன்களை திருப்திப்படுத்துவது சாத்தியமே இல்லை. ஆக புலன் இன்பம் என்பது வயிற்றிலிருந்து ஆரம்பமாகிறது. வேரில் தேவையான அளவு தண்ணீர் இருந்தால் மரம் செழிப்பாக வளரும். எனவே மரங்களுக்கு பாத-ப எனப் பெயர். அவை தண்ணீரை கால்களிலிருந்து, அதாவது வேரிலிருந்து அருந்துகின்றன  தலையிலிருந்து அல்ல. நாம் எப்படி முகம் வழியாக உணவை ஏற்கிறோம், அப்படித்தான். இப்படி பல வகையான உடல் அமைப்புகள் இருக்கின்றன. நாம் எப்படி வாய் வழியாக உண்கிறோமோ அப்படி மரங்கள் கால்கள் வழியாக உண்கின்றன. ஆக ஒவ்வொரு ஜீவனும் உண்டு தான் ஆக வேண்டும். ஆஹார-நித்ரா-பய-மைதுன. உணவு உண்பது என்பது இருந்தே ஆகவேண்டும், அதை கையால் உண்டாலும் சரி, காலால் உண்டாலும் சரி, வாய் வழியாக உண்டாலும் சரி. ஆனால் கிருஷ்ணரை பொறுத்தவரை, அவரால் எப்படி வேண்டுமானாலும் உண்ணமுடியும். அவரால் கையால், வாயால், கண்ணால் , காதால் , எப்படி வேண்டுமானாலும் உண்ண முடியும் அவர் உடல் முற்றிலும் ஆன்மீகத்தன்மை வாய்ந்தது. அவரது கண்ணுக்கும், தலைக்கும், கால்களுக்கும், எந்த வித்தியாசமும் கிடையாது. அது பிரம்ஹ-சம்ஹிதாவில் குறிக்கப்பட்டிருக்கிறது,
அங்கானி யஸ்ய ஸகலேந்திரிய-வ்ருத்திமாந்தி பஷ்யந்தி பாந்தி கலயந்தி சிரம் ஜகந்தி. ஆனந்த-சின்மய-ஸதுஜ்வல-விக்ரஹஸ்ய கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி. (பிரம்ஹ சம்ஹிதா 5.32) ஆக நம் உடலில் எப்படி புலன் இன்பம் என்பது வயிற்றிலிருந்து தொடங்கவேண்டுமோ, ஒரு மரத்தின் செழிப்பான வளர்ச்சி எப்படி வேரிலிருந்து தொடங்குகிறதோ, அதுபோலவே அனைத்திற்கும் மூலமானவர் கிருஷ்ணரே, ஜன்மாதி அஸ்ய யதஹ ([[Vanisource:SB 1.1.1|ஸ்ரீமத் பாகவதம் 1.1.1]]), வேர். கிருஷ்ண உணர்வு இல்லாமல், கிருஷ்ணரை திருப்திப்படுத்தாமல், ஒருவரால் சந்தோஷமாக இருக்க முடியாது. இது தான் வழிமுறை. ஆக கிருஷ்ணரை எப்படி மகிழ்விப்பது? கிருஷ்ணர் எப்படி மகிழ்வார் என்றால்... நாம் அனைவரும் கிருஷ்ணரின் குழந்தைகள், கடவுளின் குழந்தைகள். அனைத்துமே கிருஷ்ணருக்கு சொந்தமானது. இது தான் உண்மை. இந்த மனப்பான்மையுடன் நாம் கிருஷ்ண பிரசாதத்தை பெற வேண்டும் ஏனென்றால் அவரே அனைத்திற்கும் உரிமையாளர், போக்தா, அனுபவிப்பாளர். ஆக அனைத்தும் முதலில் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும், பிறகு அதை அவரது பிரசாதமாக பெற்றுக்கொள்ளுங்கள். அது தான் உங்களை திருப்திப்படுத்தும். அது பகவத் கீதையில் கூறப்பட்டிருக்கிறது.
புஞ்ஜதே த்வ அகம் பாபம் யே பசந்தி ஆத்ம-காரணாத்: ([[Vanisource:BG 3.13 (1972)|பகவத் கீதை 3.13]]). "சுய இன்பத்தை மட்டுமே கருதி, சமைத்து சாப்பிடுபவர்கள், வெறும் பாவத்தை உண்கிறார்கள்." புஞ்ஜதே த்வ அகம் பாபம் யே பசந்தி ஆத்ம... யஞ்யார்த்தாத் கர்மணோ அன்யத்ர லோகோ அயம் கர்ம... அனைத்துமே கிருஷ்ணருக்காக செய்யவேண்டும், உண்பது கூட, அனைத்துமே. எதுவாக இருந்தாலும் சரி, முதலில் கிருஷ்ணர் அனுபவித்த பிறகு நீங்கள் அந்த இன்பத்தை அனுபவிக்கலாம். அவர் ஏற்ற பிறகு நீங்கள் உண்ணலாம். எனவேதான் கிருஷ்ணரின் பெயர் ஹ்ருஷீகேஷ. அவரே அனைத்திற்கும் உரிமையாளர். அனைத்து புலன்களுக்கும் அவரே சொந்தக்காரர். புலன்களை உங்களால் சுதந்திரமாக அனுபவிக்க முடியாது. ஒரு வேலைக்காரனைப் போல் தான். வேலைக்காரனால் மனம் போல் அனுபவிக்க முடியாது. ஒரு சமையல்காரன் மிக சுவையான உணவு வகைகளை சமைப்பான், ஆனால் அவையை முதலாவதாக உண்பவன் அவன் இல்லை. அது சாத்தியம் இல்லை. அவனை வேலையிலிருந்து நீக்கிவிடுவார்கள். எஜமான் தான் முதலாவதாக ஏற்க வேண்டும். அதன் பிறகு அந்த சுவையான உணவுவகைகளை அவர்கள் அனுபவிக்கலாம்.
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 18:48, 29 June 2021



Lecture on BG 2.9 -- London, August 15, 1973

அன்றொரு நாள் பாரிஸ் நகரத்தில் ஒரு பத்திரிகையாளர் என்னை சந்திக்க வந்தார், ஸோஷியலிஷ்ட் பிரெஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர். "எல்லாமே கடவுளுக்குச் சொந்தமானது என்பது தான் எங்கள் தத்துவம்," என்பதை நான் அவருக்கு அறிவித்தேன். கிருஷ்ணர் கூறுகிறார், 'போக்தாரம் யக்ஞ-தபஸாம் ஸர்வ-லோக-மஹேஷ்வரம்' (பகவத் கீதை 5.29). "நானே அனுபவிப்பவன், போக்தா." போக்தா என்றால் அனுபவிப்பவன். போக்தாரம் யக்ஞ-தபஸாம். இந்த உடலைப் போல் தான். உதாரணத்திற்கு, இந்த உடலின் பாகங்கள் அனைத்தும் உழைக்கின்றன. எதற்காக? வாழ்க்கையில் இன்பம் பெறுவதற்காக தான். அனைவருக்கும் அப்படித்தான். ஆனால் அந்த இன்பத்தின் தொடக்கம் எங்கே? அந்த இன்பத்தின் தொடக்கம் வயிற்றிலிருந்து தான். வயிற்றுக்கு நீங்கள் தேவையான அளவுக்கு நல்ல உணவை கொடுக்க வேண்டியிருக்கிறது. தேவையான அளவு சக்தி இருந்தால்தான் நம்மால் ஜீரணம் செய்ய முடியும், அப்போது தான் மற்ற புலன்களுக்கும் அனுபவிப்பதற்கு தேவையான சக்தி கிடைக்கும். பிறகு உங்களால் புலனின்பத்தை அனுபவிக்க முடியும். இல்லாவிடில் அது சாதியம் இல்லை. உங்களால் உணவை செரிக்க முடியாவிட்டால்... எனக்கு வயதாகிவிட்டது, என்னால் சரியாக செரிக்க முடியாது. ஆக எனக்கு புலன்களை திருப்திப்படுத்துவது சாத்தியமே இல்லை. ஆக புலன் இன்பம் என்பது வயிற்றிலிருந்து ஆரம்பமாகிறது. வேரில் தேவையான அளவு தண்ணீர் இருந்தால் மரம் செழிப்பாக வளரும். எனவே மரங்களுக்கு பாத-ப எனப் பெயர். அவை தண்ணீரை கால்களிலிருந்து, அதாவது வேரிலிருந்து அருந்துகின்றன தலையிலிருந்து அல்ல. நாம் எப்படி முகம் வழியாக உணவை ஏற்கிறோம், அப்படித்தான். இப்படி பல வகையான உடல் அமைப்புகள் இருக்கின்றன. நாம் எப்படி வாய் வழியாக உண்கிறோமோ அப்படி மரங்கள் கால்கள் வழியாக உண்கின்றன. ஆக ஒவ்வொரு ஜீவனும் உண்டு தான் ஆக வேண்டும். ஆஹார-நித்ரா-பய-மைதுன. உணவு உண்பது என்பது இருந்தே ஆகவேண்டும், அதை கையால் உண்டாலும் சரி, காலால் உண்டாலும் சரி, வாய் வழியாக உண்டாலும் சரி. ஆனால் கிருஷ்ணரை பொறுத்தவரை, அவரால் எப்படி வேண்டுமானாலும் உண்ணமுடியும். அவரால் கையால், வாயால், கண்ணால் , காதால் , எப்படி வேண்டுமானாலும் உண்ண முடியும் அவர் உடல் முற்றிலும் ஆன்மீகத்தன்மை வாய்ந்தது. அவரது கண்ணுக்கும், தலைக்கும், கால்களுக்கும், எந்த வித்தியாசமும் கிடையாது. அது பிரம்ஹ-சம்ஹிதாவில் குறிக்கப்பட்டிருக்கிறது, அங்கானி யஸ்ய ஸகலேந்திரிய-வ்ருத்திமாந்தி பஷ்யந்தி பாந்தி கலயந்தி சிரம் ஜகந்தி. ஆனந்த-சின்மய-ஸதுஜ்வல-விக்ரஹஸ்ய கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி. (பிரம்ஹ சம்ஹிதா 5.32) ஆக நம் உடலில் எப்படி புலன் இன்பம் என்பது வயிற்றிலிருந்து தொடங்கவேண்டுமோ, ஒரு மரத்தின் செழிப்பான வளர்ச்சி எப்படி வேரிலிருந்து தொடங்குகிறதோ, அதுபோலவே அனைத்திற்கும் மூலமானவர் கிருஷ்ணரே, ஜன்மாதி அஸ்ய யதஹ (ஸ்ரீமத் பாகவதம் 1.1.1), வேர். கிருஷ்ண உணர்வு இல்லாமல், கிருஷ்ணரை திருப்திப்படுத்தாமல், ஒருவரால் சந்தோஷமாக இருக்க முடியாது. இது தான் வழிமுறை. ஆக கிருஷ்ணரை எப்படி மகிழ்விப்பது? கிருஷ்ணர் எப்படி மகிழ்வார் என்றால்... நாம் அனைவரும் கிருஷ்ணரின் குழந்தைகள், கடவுளின் குழந்தைகள். அனைத்துமே கிருஷ்ணருக்கு சொந்தமானது. இது தான் உண்மை. இந்த மனப்பான்மையுடன் நாம் கிருஷ்ண பிரசாதத்தை பெற வேண்டும் ஏனென்றால் அவரே அனைத்திற்கும் உரிமையாளர், போக்தா, அனுபவிப்பாளர். ஆக அனைத்தும் முதலில் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும், பிறகு அதை அவரது பிரசாதமாக பெற்றுக்கொள்ளுங்கள். அது தான் உங்களை திருப்திப்படுத்தும். அது பகவத் கீதையில் கூறப்பட்டிருக்கிறது. புஞ்ஜதே த்வ அகம் பாபம் யே பசந்தி ஆத்ம-காரணாத்: (பகவத் கீதை 3.13). "சுய இன்பத்தை மட்டுமே கருதி, சமைத்து சாப்பிடுபவர்கள், வெறும் பாவத்தை உண்கிறார்கள்." புஞ்ஜதே த்வ அகம் பாபம் யே பசந்தி ஆத்ம... யஞ்யார்த்தாத் கர்மணோ அன்யத்ர லோகோ அயம் கர்ம... அனைத்துமே கிருஷ்ணருக்காக செய்யவேண்டும், உண்பது கூட, அனைத்துமே. எதுவாக இருந்தாலும் சரி, முதலில் கிருஷ்ணர் அனுபவித்த பிறகு நீங்கள் அந்த இன்பத்தை அனுபவிக்கலாம். அவர் ஏற்ற பிறகு நீங்கள் உண்ணலாம். எனவேதான் கிருஷ்ணரின் பெயர் ஹ்ருஷீகேஷ. அவரே அனைத்திற்கும் உரிமையாளர். அனைத்து புலன்களுக்கும் அவரே சொந்தக்காரர். புலன்களை உங்களால் சுதந்திரமாக அனுபவிக்க முடியாது. ஒரு வேலைக்காரனைப் போல் தான். வேலைக்காரனால் மனம் போல் அனுபவிக்க முடியாது. ஒரு சமையல்காரன் மிக சுவையான உணவு வகைகளை சமைப்பான், ஆனால் அவையை முதலாவதாக உண்பவன் அவன் இல்லை. அது சாத்தியம் இல்லை. அவனை வேலையிலிருந்து நீக்கிவிடுவார்கள். எஜமான் தான் முதலாவதாக ஏற்க வேண்டும். அதன் பிறகு அந்த சுவையான உணவுவகைகளை அவர்கள் அனுபவிக்கலாம்.