TA/Prabhupada 0256 - இந்தக் கலியுகத்தில், கிருஷ்ணர் தன் பெயரான ஹரே கிருஷ்ண உருவில் வந்திருக்கிறார்

Revision as of 07:52, 31 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0256 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.8 -- London, August 8, 1973

Kṛṣṇa-varṇaṁ tviṣākṛṣṇaṁ saṅgopaṅgāstra-pārṣadam yajñaiḥ saṅkīrtanaiḥ prāyair yajanti hi sumedhasaḥ (SB 11.5.32) இங்கு, இந்த அறையில், குறிப்பாக, kṛṣṇa-varṇaṁ tviṣākṛṣṇam, இங்கே சைதன்ய மகாபிரபு இருக்கிறார். அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே தான், ஆனால் அவரது நிறம் akṛṣṇa, கருமையானது அல்ல. Kṛṣṇa-varṇaṁ tviṣa... Tviṣa என்றால் நிறத்தால் என்று பொருள். Akṛṣṇa. மாநிறம். Saṅgopaṅgāstra-pārṣadam. மேலும் அவர் தனது சங்கத்தினரோடு சேர்ந்து இருக்கிறார், நித்தியானந்த பிரபு, அத்வைத பிரபு, śrīvāsādi gaura-bhakta-vṛnda. இது தான் இக்காலத்தில் வழிபட ஏற்றத் தெய்வம். Kṛṣṇa-varṇaṁ tviṣākṛṣṇa. ஆக வழிபடும் முறை என்ன? Yajñaiḥ saṅkīrtanair prāyair yajanti hi sumedhasaḥ. இந்த சங்கீர்தன-யாகத்தை நாம் சைதன்ய மகாபிரபு, நித்தியானந்தர் மற்றும் மற்றவர்கள் முன் புரிகிறோமே, இது தான் இக்காலத்திற்கு ஏற்றச் சரியான யாகத்தின் செயல்முறை ஆகும். இல்லையெனில், வேறு எந்த ... எனவே தான் இது வெற்றியடைந்து வருகிறது. இது மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட யாகம் ஆகும். பிற யாகங்கள், ராஜசூய யாகம், இந்த யாகம், அந்த யாகம் என்று ... பல்வகை யாகங்கள் இருக்கின்றன ... சில நேரங்களில் இந்தியாவில், அவர்கள் யாகம் என்று அழைக்கப்படுவதைச் செய்கிறார்கள். அதில் பணம் சம்பாதிக்கிறார்கள். அவ்வளவுதான். அவை வெற்றியடையாது. ஏனெனில் அவர்கள் யாகம் புரியும் பிராமணர்கள் இல்லை. யாகம் புரியும் பிராமணர்கள் யாருமே தற்போது இல்லை. யாகம் புரியும் பிராமணர்கள் தாம் எப்படிச் சரியாக வேத மந்திரத்தை உச்சரிக்கிறோம் என்று சோதித்துக் கொள்வர். சோதனை என்னவென்றால் ஒரு விலங்கைத் தீயிலிட வேண்டும். அது மீண்டும் புதிய, இளம் உடல் பெற்று வர வேண்டும். அப்பொழுது அந்த யாகம் நல்ல முறையில் செய்யப் படுகிறது என்று சோதிக்கப்பட்டுவிடுகிறது. பிராமணர்கள், யாகம் புரியும் பிராமணர்கள், சரியாக வேதம் மந்திரத்தை உச்சரித்துள்ளனர் என்றாகிறது. இது தான் சோதனை. ஆனால் இந்தக் காலத்தில் அம்மாதிரி பிராமணர்கள் எங்கே? எனவே எந்த யாகமும் பரிந்துரைக்கப்படுவதில்லை. Kalau pañca vivarjayet aśvamedham, avalambhaṁ sannyāsaṁ bāla-paitṛkam, devareṇa suta-pitṛ kalau pañca vivarjayet(CC Adi 17.164). எனவே இந்தக் காலத்தில் எந்த யாகமும் இல்லை. யாகம் புரியும் பிராமணர்கள் இல்லை. இது தான் ஒரே யாகம்: ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபித்து களிப்பாட்டம் புரியுங்கள். இது தான் ஒரே யாகம். எனவே rājyaṁ surāṇām api cādhipatyam (BG 2.8). முன்னர் பல ராட்சசர்கள் தேவர்களின் ராஜ்யத்தை வென்றனர். Rājyaṁ surāṇām api cādhipatyam. ஹிரண்ய கஷிபுவைப் போல. அவன் இந்திரனின் ராஜ்யத்தின் மீது கூடத் தன் அதிகாரத்தைச் செலுத்தினான். Indrāri-vyākulaṁ lokaṁ mṛdayanti yuge yuge (SB 1.3.28). Indrāri. Indrāri என்றால் இந்திரனின் எதிரி என்று அர்த்தம். இந்திரன் சுவர்க்கலோக கிரகங்களின் மன்னன், எதிரிகள் என்றால் ராட்சசர்கள் என்று அர்த்தம். தேவர்களும், அவர்களது எதிரிகளான ராட்சசர்களும். நமக்கும் பல எதிரிகள் இருப்பது போல. நாம் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பதால், பல விமர்சகர்களும், பலபல எதிரிகளும் உள்ளனர். அவர்களுக்குப் பிடிப்பதில்லை. எனவே இது எப்போதும் உள்ளது தான். இப்போது எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. முன்னதாக, சிலரே இருந்தனர். இப்போது பலர் இருக்கிறார்கள். ஆக எனவே indrāri-vyākulaṁ lokam. இந்த அரக்கர்கள், எண்ணிக்கை, அரக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், பின்னர் vyākulaṁ lokam. மக்கள் குழம்பிவிடுகின்றனர். Indrāri vyākulaṁ lokaṁ mṛdayanti yuge yuge. எனவே அப்போது, அந்த நேரத்தில், கிருஷ்ண வருகிறார். Ete cāṁśa-kalāḥ puṁsaḥ kṛṣṇas tu bhagavān svayam (SB 1.3.28). கிருஷ்ணரின் மற்றும் கடவுளின் அவதாரங்களின் நாமங்களின் பட்டியலே உள்ளது. ஆனால் அனைத்து நாமங்களையும் பட்டியலிட்டபின், பகவத் கீதை இவ்வாறு சொல்கிறது: “இங்குப் பட்டியலிடப்பட்ட அனைத்து நாமங்களும், கிருஷ்ணரின் ஒரு பகுதி பிரதிநிதித்துவத்தையே கொடுக்கும். ஆனால் அவரது நாமம், கிருஷ்ணா என்பது இருக்கிறது..., அவர் தான் நிஜம், அவர் தம் ஆளுமை..." Kṛṣṇas tu bhagavān svayam. அவர் வந்துவிடுகிறார். … Indrāri-vyākulaṁ loke. மக்கள் அரக்கர்களின் தாக்குதலால் அதிக அளவு சங்கடப்படும் போது, அவர் வந்துவிடுகிறார். மேலும் அவர் உறுதி அளிக்கிறார். இது சாஸ்திரத்தில் உள்ளது. ஒரு சாஸ்திரம் அவர் இதே நிலையில் வருகிறார் என்கிறது. மேலும் கிருஷ்ணர் கூறுகிறார்: "ஆம், yadā yadā hi dharmasya glānir bhavati bhārata... tadātmānaṁ sṛjāmy aham: (BG 4.7) அந்த நேரத்தில், நான் வருகிறேன்." எனவே இந்தக் கலியுகத்தில், மக்கள் மிகுந்த கலக்கத்தில் இருக்கிறார்கள். எனவே, கிருஷ்ணர் தன் பெயரான, ஹரே கிருஷ்ண வடிவில் வந்திருக்கிறார். கிருஷ்ணர் நேராக வரவில்லை, ஆனால் அவரது பெயரின் வடிவில் வந்துள்ளார். கிருஷ்ணர் முழுமையானவராக இருப்பதால், அவருக்கும் அவரது பெயருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. Abhinnatvān nāma-nāminoḥ (CC Madhya 17.133). Nāma-cintāmaṇi kṛṣṇa-caitanya-rasa-vigrahaḥ pūrṇaḥ śuddho nitya-muktaḥ. அவரது நாமம் முழுமையானது. கிருஷ்ணர் எவ்வாறு முழுமையானவரோ பரிபூரணமானவரோ, அதே போல் கிருஷ்ணரின் நாமமும் முழுமையானது, பரிபூரணமானது. Śuddha. பௌதிக விஷயங்களால் அல்ல. Pūrṇaḥ śuddhaḥ nityaḥ. நித்தியத்துவம். கிருஷ்ணர் நித்தியத்துவம் வாய்ந்தவர், அவரது நாமமும் நித்தியத்துவம் வாய்ந்தது. Pūrṇaḥ śuddhaḥ nitya-muktaḥ. ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பதற்கு எந்த ஒரு பௌதிக பாவனையும் வேண்டாம். Abhinnatvān nāma-nāminoḥ. Nāma பரிசுத்த நாமமும் இறைவனும் abhinna, ஒன்றே தான். எனவே நாம் சந்தோஷமாக இருக்க முடியாது ... Rājyaṁ surāṇām api cādhipatyam (BG 2.8). நமக்குத் தேவர்களின் ராஜ்ஜியமே கிடைத்தாலும், asapatya, எந்த எதிர்ப்பும் இல்லாமல், பௌதிக பாவனை இருக்கும் வரை நம்மால் சந்தோஷமாக இருக்க முடியாது. அது சாத்தியமில்லை. அது இந்த வாசகத்தில் விளக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி. அவ்வளவுதான்.