TA/Prabhupada 0476 - சார்ந்திருப்பது தவறல்ல - சரியான இடத்தை சார்ந்திருக்கும்போது.

Revision as of 07:31, 31 May 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Seattle, October 7, 1968

சரணடைவதே எனது நிலைப்பாடு என்று எனக்குத் தெரியவில்லை, அந்த சரணடைதல் கொள்கை என் வாழ்க்கை, என் மகிழ்ச்சியான வாழ்க்கை. ஒரு சிறு குழந்தையைப் போலவே, அவர் பெற்றோரின் விருப்பத்திற்கு சரணடைந்தால், அவரது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு இளம் பெண், பெற்றோரின் விருப்பத்திற்கு சரணடைந்தால், மற்றும் ... அதுதான் அமைப்பு, வேத அமைப்பு. ஒரு பெண், பொதுவாக, சார்ந்து இருக்கிறாள். செயற்கையாக, பெண் சுதந்திரத்தை விரும்பினால், பிறகு அவனது (அவள்) வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாகிறது, அவளுடைய வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாகிறது. ஆகையினால் வேத முறை என்பது ... நான் உற்பத்தி செய்யவில்லை, நான் வேதக் கொள்கையின் அடிப்படையில் அதிகாரப்பூர்வமாகப் பேசுகிறேன். மனு-சம்ஹிதா, வேதங்களின் சட்டம், மனு, மனிதகுலத்தின் எஜமானர், மனு ... மனு மனிதகுலத்தின் தந்தை. எனவே அவர் தனது சட்ட புத்தகத்தை வைத்திருக்கிறார். இந்துக்களைப் பொருத்தவரை இந்த மனு-சம்ஹிதா சட்ட புத்தகம் இந்தியாவில் இன்றும் பின்பற்றப்படுகிறது. எனவே மனு-சம்ஹிதா என்ற அந்த புத்தகத்தில், அது குறிப்பிடப்பட்டுள்ளது, ந ஸ்த்ரியம் ஸ்வதந்தரம் அர்ஹதி. பெண்ணுக்கு சுதந்திரம் வழங்கக்கூடாது என்ற சட்டத்தை அவர் கொடுத்தார். பிறகு? வாழ்க்கை என்னவாக இருக்க வேண்டும்? வாழ்க்கைக் காலம் அவள் திருமணம் செய்து கொள்ளாத வரை, அவள் பெற்றோரைச் சார்ந்து, வழிகாட்டுதலின் அடிப்படையில் வாழ வேண்டும். அவள் திருமணமானவுடன், அவள் கணவனைச் சார்ந்து வாழ வேண்டும். மேலும் கணவர் வெளியே போகும்போது... ஏனென்றால் இந்து முறையின்படி, கணவர் இறக்கும் வரை, எல்லா நாட்களும் வீட்டில் இருக்க மாட்டார். இல்லை. குழந்தைகள் வளர்ந்ததும், அவர் மனைவியையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு, சன்யாசியாக மாறுகிறார், என்னை போலவே. எனக்கு என் குழந்தைகள் உள்ளனர், என் பேரன்கள் உள்ளனர், என் மனைவி இன்னும் இருக்கிறார் ... ஆனால் நான் எல்லா பந்தங்களையும் விட்டுவிட்டேன். ஆக என் மனைவி எவ்வாறு பராமரிக்கப்படுகிறாள்? ஓ, அவள் வளர்ந்த பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாள். எனவே எந்த கவலையும் இல்லை. ஆகையால் சரியான இடத்தை சார்ந்து இருந்தால் சார்ந்திருப்பது தவறல்ல. திருமணமாகாத பெண்ணின் சுகங்களை கவனிக்க எந்த தந்தையும் புறக்கணிக்கவில்லை, அவரது திருமணமாகாத பெண்களையும் மேலும் சிறுவர்களையும். இந்து முறையின்படி, ஒரு தந்தை, தாய் பொறுப்பு முடிவுபெறுவது அவர் குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்த பிறகு, மகள் அல்லது மகன். அவ்வளவு கடமை. பின்னர் அவர்கள் சுதந்திரமானவர்கள். எனவே சார்பு, நான் சார்பைப் பற்றி பேசுகிறேன். எனவே சார்பு மோசமானது இல்லை; சரணடைதல் மோசமானதல்ல. பெண் கணவனிடம் சரணடைவதை நான் நடைமுறையில் பார்த்திருக்கிறேன் ... இன்னும் இந்தியாவில் ஏராளமான பெண்கள் உள்ளனர், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை மிகவும் மகிமை வாய்ந்தது. ஆகையால் விஷயங்கள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சுதந்திரம், செயற்கை சுதந்திரம் எப்போதும் நல்லதல்ல. நடைமுறையில், நமக்கு சுதந்திரம் இல்லை. நான் சுதந்திரத்தைப் பற்றி நினைக்கலாம், ஆனால் நடைமுறையில் எனக்கு சுதந்திரம் இல்லை. நான் என் புலன்களுக்கு வேலைக்காரன். காமாதீனம் கடி ந கடிதா பாலிடா டுரினிடேஷா. நாம் அனைவரும் புலன்களுக்கு சேவை செய்கிறோம். ஆகையால் நமது சுதந்திரம் எங்கே? எனது தந்தையிடமிருந்தும், எனது மாநிலத்திலிருந்தும், எனது நாட்டிலிருந்தும், எனது சமூகத்திலிருந்தும் சுதந்திரத்தை நான் அறிவிக்கலாம், ஆனால் நான் என் புலன்களின் வேலைக்காரன். ஆகையால் என் சுதந்திரம் எங்கே? ஆகவே நம் இயல்பான நிலையை நாம் அறிந்து கொள்ள வேண்டும், அதாவது எல்லா சூழ்நிலைகளிலும் நாம் சார்ந்து இருக்கிறோம். எனவே எனது வாழ்க்கையின் முழுமையின் சிறந்த முறை கடவுள் கிருஷ்ணரை சார்ந்து இருப்பது. எல்லா பிரச்சினைகளுக்கும் அதுவே தீர்வு. மேலும் அதுதான் கிருஷ்ண உணர்வு இயக்கம். உங்கள் இயல்பான நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டு கடவுளிடம், கிருஷ்ணரிடம் சரணடைய முயற்சி செய்யுங்கள். பிறகு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மிகவும் எளிமையான விஷயம். நீங்கள் கடவுளிடம் சரணடைந்த தருணம், உடனடியாக நீங்கள் மகிழ்ச்சியாகி விடுவீர்கள். மாம் ஏவ ஏ பிரபத்யன்தே மாயாம் ஏதாம் டரன்டி தே.