TA/Prabhupada 0551 - நமது மாணவர்கள் நல்ல ஈடுபாடுகளை பெற்றிருக்கிறார்கள்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0551 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0550 - Don't Run After this Mirage - Just Turn Back to Godhead|0550|Prabhupada 0552 - How to Stop this Repetition of Birth and Death - I am Drinking Poison|0552}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0550 - இந்த அற்புதத்தையடுத்து ஓடாதீர் - வெறுமனே கடவுளின் பக்கம் திரும்புங்கள்|0550|TA/Prabhupada 0552 - பிறப்பு இறப்பை நிறுத்துவது எப்படி? நான் விஷம் அருந்துகிறேன்|0552}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:24, 28 August 2021



Lecture on BG 2.62-72 -- Los Angeles, December 19, 1968

பிரபுபாதா: பரம் திறிஷ்தவ நிவர்த்ததே (ப கீ 2.59). பரம், நீங்கள் மேன்மையான விஷயத்தைப் பெற்றால், நீங்கள் தரம் குறைந்த விஷயங்களை விட்டுவிடுகிறீர்கள். அதுவே நம் இயல்பு. நம் மாணவர்களைப் போலவே, அமெரிக்க மாணவர்கள், அவர்கள் அனைவரும் இறைச்சி சாப்பிடுவதைப் பழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் இப்போது வேறொரு மாணவி, அவள் இனிப்பு உருண்டைகளை தயாரிக்கிறாள், இஸ்கான் உருண்டைகள், மற்றும் அவர்கள் இறைச்சி சாப்பிடுவதை மறந்து விடுகிறார்கள். அவர்கள் இனி இறைச்சி சாப்பிடுவதை விரும்புவதில்லை. அவர்களுக்கு சிறந்த ஈடுபாடு கிடைத்துள்ளன, இனிப்பு உருண்டைகள். (சிரிப்பு) இதேபோல், அதுதான் வழி. நீங்கள் சிறந்த ஈடுபாட்டைப் பெறும்போது ... நாம் இன்பம் அடைவதின் பின் அலைகிறோம். ஆனந்தமயோ அப்யாசாத் ( வேதாந்த சூத்ரா 1.1.12 ). ஒவ்வொரு உயிரினமும் இன்பத்தைத் தேடுகின்றன. அதுவே அதன் இயல்பு. உங்களால் அதனை நிறுத்த இயலாது. நீங்கள் நிறுத்தினால் ... ஒரு குழந்தை சில இன்பங்களைத் தேடுவதைப் போல, குழந்தை எதையோ உடைக்கின்றது, அதில் இன்பம் காண்கிறது. ஆனால் அது தெரிந்து செய்யவில்லை, அது ... அவர் உடைக்கிறார், ஆனால் அவர் அந்த உடைப்பை அனுபவிக்கிறார். இதேபோல், வாழ்க்கையின் இந்த பௌதிக இன்பம் என்னவென்று நமக்குத் தெரியாது. நாம் உடைத்து கட்டுகிறோம். உங்கள் நாட்டில் நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். நல்ல கட்டிடம் அகற்றப்படுகிறது, மீண்டும், அந்த இடத்தில், மற்றொரு கட்டிடம் எழுப்பப்படுகிறது. நீங்கள் பார்க்கிறீர்களா? உடைத்தல் மற்றும் கட்டிடம். உடைத்தல் மற்றும் ... "ஓ, இந்த கட்டிடம் பழையது. அதை உடைக்கவும்." அதே குழந்தைத்தனமான நடத்தை. நீங்கள் பார்க்கிறீர்களா? நேரத்தை வீணடிக்கிறோம், இந்த மனித வடிவத்தின் மதிப்புமிக்க நேரம். உடைத்தல் மற்றும் கட்டும் பணி, உடைத்தல் மற்றும் கட்டும் பணி. "இந்த மோட்டார் கார் பயனற்றது. மற்றொரு '69 மாடல்." அந்த '69 மாதிரியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபட்டுள்ளனர். நீங்கள் பார்க்கிறீர்களா? அது என்ன ? சாராம்சத்தில், உடைத்தல் மற்றும் கட்டும் பணி, உடைத்தல் மற்றும் கட்டும் பணி. குழந்தையைப் போலவே. நீங்கள் பார்க்கிறீர்களா? ஆகவே ஒருவருக்கு நல்ல ஈடுபாடு கிடைக்காவிட்டால், கிருஷ்ண உணர்வு, நிச்சயமாக அவர்கள் இந்த உடைத்தல் மற்றும் கட்டும் பணி, உடைத்தல் மற்றும் கட்டும் பணியில் ஆகியவற்றில் தான் ஈடுபடுவார்கள். குழந்தைத்தனமான ஈடுபாடு. பரம் திறிஷ்தவ நிவர்த்ததே (ப கீ 2.59). இதுவரை நம் கிருஷ்ண உணர்வு மாணவர்கள், அவர்கள் இருபத்தி நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இரண்டு மணிநேரத்தைப் பெற முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய, பல ஈடுபாடுகள் கிடைத்துள்ளன.

எனவே ஒருவர் கிருஷ்ண உணர்வில் ஈடுபடாவிட்டால், அவர் மாயாவின் ஈடுபாட்டில் இருக்க வேண்டும், அதே விஷயம். இதுபோன்ற ஈடுபாட்டை மக்கள் புகழ்ந்து பேசலாம், "ஓ, அவர் மிகவும் பணம் சம்பாதித்த மனிதர். அவர் அத்தகைய நல்ல கட்டிடத்தை அகற்றிவிட்டு மீண்டும் ஒரு நல்ல கட்டிடத்தை கட்டியுள்ளார் " என்று. எனவே, பௌதிக மதிப்பீட்டில் இது மிகவும் நன்றாக இருக்கிறது, ஆனால் ஆன்மீக மதிப்பீட்டில் அவர்கள் வெறுமனே நேரத்தை வீணடிக்கிறார்கள். (பாடுகிறார்) ஹரி ஹரி பீபலே ஜனம கோனாய்னு, அந்த பாடல். (பாடுகிறார்) மனுஷ்ய-ஜனம பாய்யா, ராதா-கிருஷ்ணா நா பாஜியா, ஜானியா சுனியா பிஷா காய்னு. தெரிந்தே, வேண்டுமென்றே, நான் விஷம் குடிக்கிறேன். விஷம். ஏன் விஷம்? இந்த மதிப்புமிக்க மனித வடிவத்தின் நேரத்தை வீணடிப்பது விஷம் குடிப்பதற்கு ஈடாகும். ஒரு மனிதன் விஷம் குடிப்பது போல. அவரது அடுத்த வாழ்க்கை என்னவென்று அவருக்குத் தெரியாது. அவர் ஒரு பேய் ஆகப் போகிறார். பல ஆண்டுகள் பேயாக, அவருக்கு தண்டனையாக இந்த பௌதிக உடல் கிடைக்காது. நீங்கள் பார்த்தீர்களா? கவூரசுந்தர ஒரு பேய் கட்டுரையை எங்கள் 'பகவத் தர்சனம்' பத்திரிகையில் எழுதியுள்ளார். இங்கிலாந்தில், குரோம்வெல்லுடன் போராடிய பேய்? இன்னும் சண்டை உள்ளது. இரவில், சண்டை நடக்கிறது. நீங்கள் பார்க்கிறீர்களா? எனவே விஷம் என்றால் : இந்த மனித வாழ்க்கை வடிவம் கிருஷ்ண உணர்வில் இறங்கி மீண்டும் கடவுளின் லோகத்திற்கு சென்று அவருக்கு பணிவிடை செய்ய செல்வதற்கான வாய்ப்பாகும். ஆனால் இந்த கிருஷ்ண உணர்வில் நாம் ஈடுபடவில்லை என்றால், இந்த உடைப்பு மற்றும் கட்டுமானத்தில் ஈடுபடுவோம், அப்போது நாம் வெறுமனே விஷம் குடிக்கிறோம். அதாவது அடுத்த வாழ்க்கையில் நான் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் வீசப்படுவேன். 8,400,000 உயிரினங்களில், என் வாழ்க்கை கெட்டுப்போனது. எத்தனை மில்லியன் ஆண்டுகளாக நான் பயணிக்க வேண்டும் என்று நமக்குத் தெரியாது, பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில். எனவே அது விஷம்.