TA/Prabhupada 0591 - இந்த பௌதிகத்தின் பிடியிலிருந்து வெளிவருவதே எனது பணி

Revision as of 07:32, 25 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.20 -- Hyderabad, November 25, 1972

இந்தியன்: ... ஓம்கார ஸ்வரூப. ஆனால் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ஷிவா, விஷ்ணு மற்றும் பிரம்மா யார்? இந்த மூன்று பேரும் தெய்வங்களா?

பிரபுபாதா: ஆம். அவை கடவுளின் விரிவாக்கம். பூமி போல. பின்னர், பூமியிலிருந்து, நீங்கள் மரங்களைக் காணலாம். பின்னர், மரத்தில், நீங்கள் தீ வைக்கலாம். அது புகை ஆகிறது. பின்னர் நெருப்பு வெளியே வருகிறது நீங்கள் நெருப்பைப் பெறும்போது, ​​உங்கள் வேலையை நெருப்பிலிருந்து பெற்று கொள்ளலாம் எனவே, எல்லாம் ஒன்று, ஆனால் ... ஒரே உதாரணம்: பூமியிலிருந்து, மரம்; மரத்திலிருந்து, புகை; புகையிலிருந்து நெருப்பு. ஆனால் நீங்கள் உங்கள் வேலையை செய்து கொள்ள வேண்டியிருந்தால், அதற்கு தீ தேவைப்படுகிறது, இருப்பினும், அவை அனைத்தும் ஒன்றாகும். இதேபோல், உபதெய்வங்கள், பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர் உள்ளனர் எனவே நீங்கள் உங்கள் வேலையை செய்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் நெருப்பிடம் செல்ல வேண்டும், விஷ்ணு, சத்தமா, சத்வ-குணா இது செயல்முறை. அவை ஒன்று என்றாலும், உங்கள் வேலையை மற்றவர்களுடன் அல்லாமல், விஷ்ணு மூலம் முடிக்க முடியும். எனது வேலை என்ன? இந்த பௌதிகப் பிடியிலிருந்து வெளியேறுவதே எனது வேலை ஆகவே, இந்த பௌதிகப் பிடியிலிருந்து விடுபட யாராவது ஆர்வமாக இருந்தால், அவர் மற்றவர்களை அல்ல, விஷ்ணுவைத் தஞ்சம் அடைய வேண்டும்.

இந்தியன்: தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்துங்கள், ஆசை என்றால் என்ன? ஆசை இருக்கும் வரை, நாம் கடவுளை உணர முடியாது. கடவுளை உணர்ந்து கொள்வதும் ஒரு ஆசை.

பிரபுபாதா: ஆசை என்றால் பௌதிக ஆசை நீங்கள் இந்தியர் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் நாட்டை எவ்வாறு மேம்படுத்துவது என்பது உங்கள் ஆசை அல்லது பல ஆசைகள். அல்லது நீங்கள் ஒரு குடும்பஸ்தராக இருந்தால். எனவே இவை அனைத்தும் பௌதிக ஆசைகள் எவ்வளவு காலமாக நீங்கள் பௌதிக ஆசைகளால் சூழப்பட்டிருக்கிறீர்களோ, அவ்வளவு காலம் பௌதிக இயற்கைக்குக் கட்டுப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் இந்தியர் அல்லது அமெரிக்கர் அல்ல என்று நினைத்தவுடன் நீங்கள் ஒரு பிராம்மனரோ அல்லது வைஷ்ணவ, பிராம்மனரோ அல்லது சத்திரியரோ அல்ல நீங்கள் கிருஷ்ணரின் நித்திய சேவகன், என்று நினைப்பது அது தூய்மைப்படுத்தப்பட்ட ஆசை என்று அழைக்கப்படுகிறது ஆசை இருக்கிறது, ஆனால் நீங்கள் ஆசையை தூய்மைப்படுத்த வேண்டும். நான் இப்போது விளக்கினேன் ஸர்வோபாதி-வினிர்முக்தம் (சைதன்ய சரிதாம்ர்ய்தம் மத்ய லீலை 19.170). இவை உபாதிகளாகும். நீங்கள் ஒரு கருப்பு கோட் அணிந்து இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். எனவே நீங்கள் கருப்பு கோட் என்று அர்த்தமா? நீங்கள் சொன்னால் ... "நீங்கள் யார்?" என்று நான் கேட்டால், "நான் கருப்பு கோட்" என்று நீங்கள் சொன்னால், அது சரியான பதிலா? இல்லை இதேபோல், நாம் ஒரு உடையில் இருக்கிறோம் , அமெரிக்க உடை அல்லது இந்திய உடையில் எனவே யாராவது உங்களிடம் "நீங்கள் யார்?" என்றால், "நான் இந்தியன்." என்று சொல்வது தவறான அடையாளம் "அஹம் பிரம்மாஸ்மி" என்று நீங்கள் சொன்னால், அது உங்கள் உண்மையான அடையாளம். அந்த உணர்தல் தேவை.

இந்தியன்: நான் எப்படிப் பெறுவது ...?

பிரபுபாதா: அதற்கு தேவைப்படுவது , இம், நீங்கள் தபஸா ப்ரஹ்மசர்யேண (ஸ்ரீமத் பாகவதம் 6.1.13). நீங்கள் கொள்கைளைப் பின்பற்ற வேண்டும் ஆதௌ ஷ்ரத்தா தத: ஸாது-ஸங்கோ 'த பஜன-க்ரியா (CC Madhya 23.14-15) நீங்கள் செயல்முறையை ஏற்க வேண்டும். அப்போது நீங்கள் உணருவீர்கள்.

இந்தியன்: ஆனால் நேற்று ஒரு பக்தர், அவர் இந்த உலக வாழ்க்கையை கைவிட்டார், காட்டுக்குச் சென்றார், அவர் கிருஷ்ணரின் பெயரைக் கோஷமிட்டுக் கொண்டிருந்தார், இதுவும் அதுவும் ஆனால் அவர் ஒரு வகையான யோகி. அதுபோல அவர் ஒரு மானின் மீது அன்புக் கொண்டிருந்தார். ஆகவே, மரணத்தின் போது, ​​அவருக்கு மான் பற்றிய சிந்தனை வந்தது, அடுத்த பிறப்பில் அவர் மான் ஆகிறார். எனவே வேண்டுமென்றே எந்த விருப்பமும் இல்லை, ஆனால் எப்படியோ அவர் அதில் வந்தார் ...

பிரபுபாதா: இல்லை, ஆசை இருந்தது. அவர் ஒரு மானைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார். ஆசை இருந்தது.

இந்தியன்: நாங்கள் பல விஷயங்களைப் பற்றி சிந்திக்கிறோம் ...