TA/Prabhupada 0628 - உள்ளதை உள்ளவாறு ஏற்கவேண்டும் - இருக்கலாம், இருக்கக்கூடும் போன்ற அனுமானங்களோடு ஏற்கக்

Revision as of 07:39, 25 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.13 -- Pittsburgh, September 8, 1972

எனவே இங்கே, பூரண அறிவு கிருஷ்ணரால் பேசப்படுகிறது தேஹினோ 'ஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா ததா தேஹாந்தர-ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி (ப.கீ 2.13) தேஹினோ, உயிருள்ள ஆன்மாவின், உடல் மாறுகிறது. இதேபோல், மரணத்திற்குப் பிறகு, மரணம் என்று அழைக்கப்படுவதற்கு பிறகு ... ஏனெனில் மரணம் இல்லை இந்த உடலின் செயல்பாட்டை நிறுத்திய பிறகு, ஆன்மா மற்றொரு உடலுக்கு மாற்றப்படுகிறது. இந்த அறிக்கை பகவத்-கீதையிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. "இது உண்மை" என்று இந்த அறிக்கையை நாம் ஏற்றுக்கொண்டால், நமது ஆன்மீக வாழ்க்கை உடனடியாக தொடங்குகிறது. இந்த புரிதல் இல்லாமல், ஆன்மீக புரிதல் பற்றிய கேள்வி இல்லை. தெளிவற்ற அனைத்தும், ஒரு மன ஊகம், "ஒருவேளை," இருக்கலாம்." இந்த கோட்பாடுகள் விஞ்ஞானிகள் மற்றும் தத்துவவாதிகள் என்று அழைக்கப்படுபவர்களால் முன்வைக்க படுகின்றன. ஆனால் "ஒருவேளை," "இருக்கலாம்" போன்றவற்றை நாங்கள் ஏற்கவில்லை. இல்லை. உண்மை என்ன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இது நம்பிக்கை பற்றிய கேள்வி அல்ல; இது உண்மை பற்றிய ஒரு கேள்வி. எனவே இதுதான் உண்மை. இப்போது, ​​ஆன்மா எவ்வாறு பெயர்கிறது? இந்த பிறவிக்குப் பிறகு, நான் சிறந்த பிறவியைப் பெறுகிறேன் என்றால், அது நல்லது. ஆனால் எனக்கு சிறப்பு இல்லாத பிறவி கிடைத்தால், அப்போது நிலை என்ன? அடுத்த பிறவி எனக்கு ஒரு பூனை அல்லது நாய் அல்லது பசுவின் பிறவி கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் மீண்டும் அமெரிக்காவில் பிறக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நீங்கள் உங்கள் உடலை மாற்றினால், முழு சூழ்நிலையும் மாறும். மனிதனாக இருக்கும்போது, உங்களுக்கு அரசால் அனைத்து பாதுகாப்பும் வழங்கப்படுகிறது, ஆனால் நீங்கள் மற்றொரு உடலாக மாறியவுடன், மரம் அல்லது விலங்குகள், உங்களை நடத்தும் விதம் வேறுபடுகிறது. விலங்கு மிருகவதை கூடத்திற்கு செல்கிறது; மரங்கள் வெட்டப்படுகின்றன. எந்த எதிர்ப்பும் இல்லை. எனவே இது பௌதிக வாழ்வின் நிலை. சில நேரங்களில் நாம் பிறவியின் சிறந்த நிலையைப் பெறுகிறோம், சில சமயங்களில் நாம் பிறவியின் குறைந்த நிலையைப் பெறுகிறோம். எந்த உத்தரவாதமும் இல்லை. அது எனது வேலையைப் பொறுத்தது. அது நடைமுறை. இந்த பிறவியிலும், நீங்கள் படித்தால், உங்கள் எதிர்காலம் மிகவும் அருமையாக இருக்கும். நீங்கள் படித்திருக்கவில்லை என்றால், உங்கள் எதிர்காலம் அவ்வளவு பிரகாசமாக இருக்காது. இதேபோல், இந்த மனித வாழ்க்கையில், இந்த தொடர்ச்சியான பிறப்பு மற்றும் இறப்புக்கு நாம் ஒரு தீர்வை உருவாக்க முடியும். மனித பிறவியின் ஒரே நோக்கம் இதுதான், இந்த நிலையிலிருந்து எவ்வாறு வெளியேறுவது: பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய். நாம் தீர்வு காண முடியும். அந்த தீர்வு - கிருஷ்ண பக்தி. நாம் கிருஷ்ண பக்தி கொண்டவுடன்... கிருஷ்ண பக்தி என்றால் கிருஷ்ண, முழுமுதற் கடவுள், இறைவன், கடவுள். நாம் கிருஷ்ணரின் அங்க உறுப்பு. இது கிருஷ்ண பக்தி. அதைப் புரிந்து கொள்ள... உங்கள் தந்தையையும், உங்கள் சகோதரர்களையும் உங்களையும் நீங்கள் புரிந்துகொள்வது போல. நீங்கள் அனைவரும் தந்தையின் மகன்கள். எனவே புரிந்து கொள்வது கடினம் அல்ல. தந்தை முழு குடும்பத்தையும் பராமரிப்பது போல, கிருஷ்ணர், முழுமுதற் கடவுள், அவருக்கு எண்ணற்ற மகன்கள், வாழும் உயிரினங்கள் உள்ளன, மேலும் அவர் முழு உடலையும், முழு குடும்பத்தையும் பராமரித்து வருகிறார். சிரமம் என்ன? அடுத்த கடமை தேர்ந்த பக்தி கொள்வது. ஒரு நல்ல மகனைப் போலவே, "தந்தை எனக்காக இவ்வளவு செய்திருக்கிறார்" என்று உணரும்போது. நான் அதை திருப்பிச் செலுத்த வேண்டும், அல்லது குறைந்தபட்சம் என் தந்தை எனக்காகச் செய்த கடமையை நான் ஏற்க வேண்டும், " இந்த உணர்வு கிருஷ்ண உணர்வு என்று அழைக்கப்படுகிறது.