TA/Prabhupada 0740 – நாம் சாஸ்திர ஏடுகளின் வாயிலாக காணவேண்டும்

Revision as of 07:21, 19 July 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on CC Adi-lila 1.7 -- Mayapur, March 31, 1975

அத்வைத அச்யுத அநாதி அனந்த-ரூபம். க்ஷீரோதகஷாயீ விஷ்ணு எல்லோரிடமும், ஒவ்வொரு உயிரினத்திலும், இதயத்திலும் அமைந்தவர் ஈஷ்வர: ஸர்வ-பூதானாம் ஹ்ருத்-தேஷே 'ர்ஜுன திஷ்டதி (ப.கீ 18.61). அனைவரின் இதயத்திலும் இருக்கும் அந்த ஈஷ்வர, அந்தர்யாமீ, அதாவது க்ரோதகஷாயீ விஷ்ணு. எல்லா உயிரினங்களின் இதயத்திலும் மட்டுமல்ல, அவர் அணுவுக்குள்ளும் இருக்கிறார் அண்டாந்தர-ஸ்த-பரமாணு-சயா... பரமாணு. பரமாணு என்றால் அணு இந்த வழியில் விஷ்ணு விரிவாக்கங்கள் உள்ளன. இது எங்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாதது, ஆனால் கிருஷ்ணரின் அருளால், சாஸ்திரங்களின் விளக்கத்திலிருந்து நாம் ஓரளவு புரிந்து கொள்ள முடியும் இல்லையெனில், இவை எவ்வாறு நிகழும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது, ஆனால் அது நடக்கும் ஷாஸ்த்ர-சக்ஷுஷ: என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சாஸ்திரங்களின் பக்கங்கள் மூலம் நாம் பார்க்க வேண்டும். இல்லையெனில் அது சாத்தியமில்லை ஆகவே.

நாம் விஷ்ணு-தத்துவத்தை அறிய விரும்பினால், நாம் கிருஷ்ணரை அறிய விரும்பினால், அவரது உயர்ந்த நிலை பற்றி அறிய விரும்பினால், பின்னர் இங்கே சாஸ்திரத்தின் விளக்கம் நாம் அவற்றை அப்படியே எடுத்துக் கொண்டால், தவறான விளக்கம் இல்லாமல் எந்த அசாதாரண புத்திசாலித்தனத்தையும் காட்டாமல் அது சாத்தியமில்லை. நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே உத்தரவு என்னவென்றால், நீங்கள் சாஸ்திரங்களின் கூற்றை ஏற்றுக்கொள்ளுங்கள் அதாவது ... பகவத்-கீதை சொல்கிறது ய: ஷாஸ்த்ர-விதிம் உத்ஸ்ருஜ்ய வர்ததே-காம-காரத: (ப.கீ 16.23) நீங்கள் சாஸ்திரங்களின் விளக்கத்தைப் பின்பற்றவில்லை என்றால், நீங்களாக ஏதாவது தயாரித்தால்," பின்னர் ந ஸித்திம் ஸ அவாப்நோதி , "அப்படியானால் நீங்கள் ஒருபோதும் முழுமையைப் பெற மாட்டீர்கள்." நாம் சாஸ்திரத்தை பின்பற்ற வேண்டும்; இல்லையெனில் கிருஷ்ணரின் உயர்ந்த நிலையைப் புரிந்து கொள்ள வேறு மாற்று இல்லை அவர் எப்படி வெவ்வேறு வடிவங்களில் விரிவடைகிறார், விஷ்ணுவாக, நாராயணனாக சில நேரங்களில் கிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரம் என்று வாதிடுகின்றனர் அதுவும் உண்மை. நீங்கள் சைதன்யாவில் காணலாம் ... இந்த வகையில் உண்மை - எந்த அவதாரமும் வரும்போது, அவர் க்ஷீரோப்தி-ஷாயீ விஷ்ணு வழியாக வருகிறார். ஆனால் க்ஷீரோப்தி-ஷாயீ என்பது கிருஷ்ணரின் பகுதி விரிவாக்கம் ஆகும். பொருள் மிகவும் சிக்கலானது, ஆனால் நாம் சாஸ்திரத்தைப் பின்பற்றி ஏற்றுக்கொண்டால், அப்போது ஓரளவு தெளிவினை நாம் பெறலாம்

எனவே நித்யானந்த ராமா ... எனவே யஸ்யாம்ஷ ஸ நித்யானந்த-ராம:. நித்யானந்தர் தான் பலராமர். எனவே அவர், நித்யானந்த-ராம:. என்று கூறப்படுகிறார் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு போல க்ருஷ்ணாய-க்ருஷ்ண-சைதன்ய நாம்னே: நான் இப்போது கிருஷ்ண சைதன்ய என்ற உருவில் உள்ள கிருஷ்ணரை வணங்குகிறேன் அவர் கிருஷ்ணர். இதேபோல், நித்யானந்தர் தான் பலராமர் பலராம ஹோஇலோ நிதாஇ எனவே இது இங்கே கூறப்படுகிறது, நித்யானந்தாக்ய-ராம:: அவர் பலராமர், ஆனால் தற்போதைய நேரத்தில் அவர் நித்யானந்தர் என்ற பெயரில் தோன்றியுள்ளார். "

மிக்க நன்றி.

பக்தர்கள்: ஹரிபோல்! (முடிவு)