TA/Prabhupada 0914 - ஜடம் கிருஷ்ணருடைய ஒரு வகை சக்தி, ஆத்மா அவருடைய மற்றொரு சக்தி: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0913 - Krsna Has No Past, Present and Future. Therefore He's Eternal|0913|Prabhupada 0915 - Sadhu is My heart, and I am also the Sadhu's Heart|0915}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0913 - கிருஷ்ணருக்கு இறந்த காலமும், நிகழ் காலமும், எதிர் காலமும் இல்லை. எனவே அவர் நித்தியமானவ|0913|TA/Prabhupada 0915 - சாது என் இதயம் மற்றும் நானே சாதுவின் இதயம்|0915}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:26, 16 August 2021



730420 - Lecture SB 01.08.28 - Los Angeles

பிரபுபாதா : விபு4 என்றால் உன்னதமானவர், மிக உயர்ந்தவர். விபு4. நாம் அனு ஆவோம், நாம் மிகச் சிறியவர்கள் மேலும் கிருஷ்ணர் மிகப் பெரியவர். நாம் கிருஷ்ணருடைய அங்க துணுக்கு என்பதால், கிருஷ்ணர் சிறியதும் ஆவார். கிருஷ்ணர் மிகச் சிறியதும், மிகப்பெரியதும் - ,இரண்டும் ஆவார். நாம் மிகச்சிறியவர்கள் மட்டும்தான். ஆனால் கிருஷ்ணரோ இரண்டும் ஆவார். கிருஷ்ணர், விபு4, மிகப் பெரியவர் என்றால் அனைத்தும் அடக்கம். அந்த பெரியதில்...... உங்களிடம் ஒரு பெரிய பை இருப்பதாக வைத்துக்கொள்வோம், அதில் நீங்கள் பல விஷயங்களை வைத்துக்கொள்ளலாம். ஒரு சிறிய பையில் நீங்கள் அவ்வாறு செய்ய முடியாது.

எனவே கிருஷ்ணர் விபு4. காலம் - கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம் அவருள் அடக்கம். எல்லாம் அவருள் அடங்கிவிடும், அவர் எல்லா இடத்திலும் உள்ளார். அதுதான் விபு4. விபு4, எல்லா இடத்திலும் நிறைந்தவர், கிருஷ்ணர் எல்லா இடத்திலும் இருக்கிறார். அண்டா3ந்தர-ஸ்த2-பரமாணு-சயாந்தர-ஸ்த2ம் (அண்டா3ந்தர-ஸ்த2-பரமாணு-சயாந்தர-ஸ்த2ம் (பி.ச 5.35). பிரம்ம சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால்... கிருஷ்ணர் கிருஷ்ணர் இல்லாமல், ஜடம் வளர்ச்சி அடைய முடியாது. விஞ்ஞானிகள், நாத்திக விஞ்ஞானிகள், உயிர் ஜடப்பொருளிலிருந்து தோன்றுவதாக கூறுகிறார்கள். இது முட்டாள்தனமானது. இல்லை. ஜடம், கிருஷ்ணருடைய ஒருவகை சக்தி மேலும் ஆத்மா அவருடைய மற்றொரு சக்தி. ஆத்மா உயர்ந்த சக்தி, மேலும் ஜடம் தாழ்ந்த சக்தி. ஜடம், உயர்ந்த சக்தி இருக்கும் போதுதான் வளர்ச்சி அடைகிறது.

உதாரணத்துக்கு, இந்த நாடு, அமெரிக்காவை எடுத்துக் கொள்வோம். இதே அமெரிக்கா, இருநூறு அல்லது முந்நூறு வருடங்களுக்கு முன்பும் இருந்தது, இந்த நிலம், ஆனால் இது வளர்ச்சி அடையவில்லை. ஆனால் இப்போது, சில உயர்ந்த உயிர்வாழிகள் ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்ததனால், இப்போது அமெரிக்கா மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே இந்த வளர்ச்சிக்கு காரணம் உயர்ந்த சக்தி தான். தாழ்ந்த சக்தியான, பல்வேறு வெற்று நிலங்கள் அப்படியே இருக்கிறது. ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இருப்பதைப்போல. அவை வளர்ச்சியடையாத நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஏன் வளர்ச்சி அடையவில்லை? காரணம் உயர்ந்த சக்தியான உயிர்வாழி, அதனை இன்னும் தொடவில்லை. உயர்ந்த சக்தி ஆன, உயிர்வாழி அதனை தொட்ட உடனேயே, அந்த நிலம், பல தொழிற் சாலைகள், வீடுகள் நகரங்கள், சாலைகள், வண்டிகள் என எல்லாவற்றுடன், நம்மால் வளர்ச்சி அடைய முடிவதைப் போல வளர்ச்சி அடைந்துவிடும்.

எனவே, முடிவு என்னவெனில், ஜடம் தானாக வளர்ச்சி அடைய முடியாது. இல்லை இது சாத்தியமில்லை. உயர்ந்த சக்தி அதனை தொட வேண்டும். அதற்குப் பிறகு அது செயல்படும். பல வகை இயந்திரங்கள் உள்ளன. அவையெல்லாம் ஜடம் தான். தாழ்ந்த சக்தி. அதனை இயக்குபவர் அந்த இயந்திரத்தை தொடாத வரையில் அது செயல்படாது. ஒரு முதல்தர மோட்டார் கார், மிகுந்த விலை மதிப்புடைய ஒரு கார் இருந்தாலும், ஓட்டுனர் வராத வரைக்கும், லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும், அது நின்று கொண்டுதான் இருக்கும். அதில் எந்த பயனும் இல்லை. இந்தப் பொது அறிவு தான் குறைகிறது. ஜடம் , ஒரு உயர்ந்த சக்தி, உயிர்வாழி தொடாத வரைக்கும் தன்னிச்சையாக இயங்க முடியாது. இது சாதாரண பொது அறிவு தான். எனவே எப்படி இந்த அயோக்கிய விஞ்ஞானிகள் உயிர் ஜடத்திலிருந்து வளர்ச்சி அடைவதாக கூறுகிறார்கள்? இல்லை. இதை எப்படி முடிவு செய்வது? இதுபோல், இதுவரை எந்த நிகழ்வும் இல்லை. அவர்கள் தவறாக கூறுகிறார்கள்...... அவர்களுக்குப் போதுமான அறிவு இல்லை.

எனவே இந்த பிரபஞ்சங்களும் கூட கிருஷ்ணரின் இருப்பால் தான் வளர்ந்துள்ளன. எனவே தான் பிரம்ம சம்ஹிதை கூறுகிறது : அண்டா3ந்தர-ஸ்த2-பரமாணு-சயாந்தர-ஸ... அவர்கள் இப்போது அணுக்களைப் பற்றி படிக்கிறார்கள். பல விஷயங்கள் நடந்து கொண்டுள்ளன, எலக்ட்ரான், ப்ரோட்டான், ஏன்? காரணம் கிருஷ்ணர் இருக்கிறார். இதுதான் உண்மையான விஞ்ஞானம். எனவே கிருஷ்ணருக்கு எந்த கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலமும் இல்லை அவர் நித்தியமான காலம். அவருக்கு எந்தத் தொடக்கமும் இல்லை அவருக்கு எந்த முடிவும் இல்லை. மேலும் அவர் அனைவருக்கும் சமமானவர் தான். ஸமம்' சரந்தம் (ஸ்ரீ.பா 3 1.8.28). கிருஷ்ணரைப் பார்ப்பதற்கும், கிருஷ்ணரை புரிந்துகொள்வதற்கும், நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டியது மட்டும்தான். அதுதான் கிருஷ்ண உணர்வின் வேலையாகும்.

மிக்க நன்றி.

பக்தர்கள் : ஜெய, எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதாவுக்கே.