TA/Prabhupada 1055 - நீங்கள் செய்யும் கடமைகள் மூலம் கடவுளை மகிழ்விக்கிறீர்களா என்று பாருங்கள்: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 1054 - The Scientist, the Philosopher, the Scholars - all Godless|1054|Prabhupada 1056 - K. C. Movement is on the Spiritual Platform, above Body, Mind and Intelligence|1056}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 1054 - விஞ்ஞானி, தத்துவஞானி, அறிஞர்கள் - அனைவரும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள்|1054|TA/Prabhupada 1056 - கிருஷ்ண பக்தி இயக்கம் உடல், மனம் மற்றும் நுண்ணறிவுக்கு மேலே, ஆன்மீக தளத்தில் உள்ளது|1056}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:26, 22 August 2021



750522 - Conversation B - Melbourne

பிரபுபாதர்: எந்தவொரு துறையிலும் அறிவின் முன்னேற்றம் மிகவும் நல்லது. ஆனால் நோக்கம் என்ன? முழுமுதற்கடவுளை மகிமைப்படுத்துவதே இதன் நோக்கம். நீங்கள் வழக்கறிஞராக இருப்பதைப் போல. சில கடினமான நேரத்தில் எங்களுக்கு உதவி செய்தீர்கள். ஏன்? கடவுளை மகிமைப்படுத்த நீங்கள் தொடர்ந்து விரும்பியதால், "இவர்கள் நன்றாக செய்கிறார்கள், அவர்கள் ஏன் துன்புறுத்தப்பட வேண்டும்?" எனவே நீங்கள் இறைவனை மகிமைப்படுத்த உதவினீர்கள் என்று அர்த்தம். எனவே அது ஒரு வழக்கறிஞராக உங்கள் வெற்றி. எனவே இந்த இயக்கத்திற்கு உதவும் எவரும், "அவர்கள் கிருஷ்ண பக்தியை, கடவுள் பக்தியை பரப்புகிறார்கள். அவர்கள் எல்லா வகையிலும் உதவப்பட வேண்டும், "அதுதான் முழுமை. எல்லாம் தேவை, ஆனால் அது முழுமுதற்கடவுளை மகிமைப்படுத்தும் விஷயத்தில் உச்சக்கட்டத்தை அடைய வேண்டும். பின்னர் அது சரியானது. வேறொரு இடத்தில்... இந்த வசனத்தைக் கண்டுபிடி:

அத: பும்பிர் த்விஜ-ஷ்ரேஷ்டா
வர்ணாஷ்ரம-விபாகஷ:
ஸ்வனுஷ்டிதஸ்ய தர்மஸ்ய
ஸம்ஸித்திர் ஹரி-தோஷணம்
(ஸ்ரீ.பா. 1.2.13).

இந்த நிறுவனத்திற்கு நீங்கள் கடினமான நிலையில் உதவியது போல. அதாவது நீங்கள் கிருஷ்ணரை மகிழ்வித்தீர்கள். அதுவே உங்கள் வெற்றி. எனது பக்தர்கள் சிரமத்தில் உள்ளனர். அவர்கள் சில சட்ட உதவிகளை விரும்பினர். நீங்கள், ஒரு வழக்கறிஞராக, அவர்களுக்கு உதவி செய்தீர்கள், எனவே நீங்கள் கடவுளை மகிழ்வித்தீர்கள். அதுவே வாழ்க்கையின் நோக்கம். வெவ்வேறு துறைகளில் எனது வேலையின் மூலம்-ஒரு வழக்கறிஞராக, ஒரு தொழிலதிபராக, அல்லது ஒரு அறிஞராக, ஒரு தத்துவஞானியாக, ஒரு விஞ்ஞானியாக, ஒரு பொருளாதார நிபுணராக ... பல தேவைகள் உள்ளன. அது ஒரு பொருட்டல்ல. ஆனால் நீங்கள் வெற்றி பெறுகிறீர்களா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். வெற்றியின் தரம் என்ன? நீங்கள் கடவுளை மகிழ்வித்தீர்களா என்பது வெற்றியின் தரம். நீங்கள் இதைப் படியுங்கள். அத: பும்பிர் த்விஜ-ஷ்ரேஷ்டா:...

ஷ்ருதகீர்தி: அத:...

பிரபுபாதர்: பும்பிர்.

ஷ்ருதகீர்தி: அத: பும்பிர்

த்விஜ-ஷ்ரேஷ்டா:.

பிரபுபாதர்: ஹ்ம்ம். இந்த வசனத்தைக் கண்டுபிடி.

ஷ்ருதகீர்தி:

அத: பும்பிர் த்விஜ-ஷ்ரேஷ்டா
வர்ணாஷ்ரம-விபாகஷ:
ஸ்வனுஷ்டிதஸ்ய தர்மஸ்ய
ஸம்ஸித்திர் ஹரி-தோஷணம்
(ஸ்ரீ.பா. 1.2.13).

"இரண்டு முறை பிறந்தவர்களில் மிகச் சிறந்தவரே, ஆகவே, ஒருவர் தனது நிர்ணயிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் அடையக்கூடிய மிக உயர்ந்த பரிபூரணத்தை, தர்மத்தை, சாதி மற்றும் வாழ்க்கை ஒழுங்கின் படி, இறைவனை- ஹரியைப் பிரியப்படுத்துவதே"

பிரபுபாதர்: அதுதான். அது இருக்க வேண்டும்... அது "எனது தொழிலால், எனது வேலையால், என் திறமையால், என் திறன்களால் ..." - வெவ்வேறு பிரிவுகள் உள்ளன- "நான் கடவுளைப் பிரியப்படுத்தினேனா?" பின்னர் அது வெற்றி பெறுகிறது. உங்கள் சட்டத் தொழிலால் நீங்கள் கடவுளைப் பிரியப்படுத்தியிருந்தால் - நீங்கள் வேறு உடையில் இருக்கிறீர்கள், அது ஒரு பொருட்டல்ல. அவர்கள் முழு நேரமும் கடவுளை மட்டுமே சேவிப்பதற்கு சமமாக நீங்கள் நல்லது செய்கிறீர்கள். ஏனென்றால், கடவுளைப் பிரியப்படுத்துவதும் அவர்களின் வியாபாரமாகும். இதேபோல், நீங்கள் கடவுளைப் பிரியப்படுத்தியிருந்தால், உங்கள் சட்டத்தை கடைப்பிடிப்பதன் மூலமும், நீங்கள் மகான்களைப் போல நல்லவர். அதுவே நோக்கமாக இருக்க வேண்டும்: "நான் எனது தொழில் முறை கடமை அல்லது தொழிலில் கடவுளை மகிழ்வித்திருக்கிறேனா?" அதுதான் தரநிலை. இதை மக்கள் எடுத்துக் கொள்ளட்டும். "நீங்கள் உங்கள் நிலையை மாற்றி கொள்ளுங்கள்," என்று நாங்கள் கூறவில்லை. "நீங்கள் ஒரு சந்நியாசியாக மாற அல்லது உங்கள் தொழிலை விட்டுவிட்டு வழுக்கைத் தலை கொள்ள." இல்லை, நாங்கள் அதைச் சொல்லவில்லை. (சிரிக்கிறார்) நாம் இயல்பாகவே இருக்கிறோம். (சிரிப்பு) எனவே இது கிருஷ்ண பக்தி, நீங்கள் உங்கள் நிலையில் இருக்க வேண்டும், ஆனால் நீங்கள் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் கடவுளை மகிழ்வித்தீர்களா என்று பாருங்கள். பின்னர் எல்லாம் சரியாகிவிடும்.