TA/660729 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அடுத்த பிறவியில் என்னவாகப் போகிறோம் என்ற எந்தவித உத்தரவாதமும் இல்லை. அது கர்மத்தில் தங்கியுள்ளது, ஏனென்றால் இந்த உடல் பௌதிக இயற்கையினால் கொடுக்கப்பட்டது. கேட்பது கொடுக்கப்படுவது போல் அது உருவாக்கப்படவில்லை. ப்ரக்ருதே꞉ க்ரியமாணானி கு₃ணை꞉ கர்மாணி ஸர்வஷ₂꞉ (BG 3.27). இங்கு கர்மம் ஆற்ற ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது, மறுபிறவியில் என்ன பெறப் போகிறீர்கள் என்று அக்கர்மத்தின்படி தீர்ப்பளிக்கப்படும். அதுவே பிரச்சனை. ஐம்பது வருடங்கள், அறுபது வருடங்கள், எழுபது வருடங்கள் அல்லது நூறு வருடங்களேயான இந்த வாழ்வுதான் எல்லாம் என்று எண்ண வேண்டாம். ஒரு உடலிலிருந்து மறுவுடலுக்கு மாறும் தொடர்ச்சியான வாழ்வைக் கொண்டுள்ளீர்கள். இதுதான் நடக்கிறது. அதை அறிய வேண்டும். ஒரு உடலிலிருந்து மறுவுடலுக்கு மாறி, பௌதிக துன்பங்களுக்கு ஆட்படும் இந்த முட்டாள்தனத்தை நிறுத்துவதற்கு இங்கேயொரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது."
660729 - சொற்பொழிவு BG 04.12-13 - நியூயார்க்