TA/670106b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இப்படிப்பட்ட புத்திசாலித்தனம் எங்குமில்லை, இப்படிப்பட்ட அறிவு எங்குமில்லை, அவர்கள் மிகவும் கர்வம் கொள்கிறார்கள். எமக்கும் உண்மையில் வேண்டுமெனில்... ஏனென்றால் அறிவு போன்றவை கடவுளின் பரிசுகள்... இது இங்கு விவரிக்கப்பட்டுள்ளது, புத்திர் ஜ்ஞானம் அஸம்மோஹ꞉ (BG 10.4). இவை அனைத்தும் கடவுளின் பரிசுகள். நாம் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மனித வடிவம் கடவுளின் பரிசுகளை பயன்படுத்திக் கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. கடவுள் நமக்கு அருமையான உணவுப்பண்டங்களை கொடுத்துள்ளார்; புத்தியை கொடுத்துள்ளார்; அறிவை கொடுத்துள்ளார்; இப்போது அறிவுசார் புத்தகங்களை கொடுத்துள்ளார். பகவத்கீதையில் அவர் தானே பேசுகிறார். அதை ஏன் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? அதை ஏன் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? நாம் அதை பயன்படுத்திக் கொண்டால், ஒரு ஆரியனாக அல்லது மனிதனாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்."
670106 - சொற்பொழிவு BG 10.04-5 - நியூயார்க்