TA/Prabhupada 0690 - கடவுள் பரிசுத்தமானவர், அவரது ராஜ்ஜியமும் பரிசுத்தமானது



Lecture on BG 6.35-45 -- Los Angeles, February 20, 1969

பக்தர் : மேலும் முன்னேற்றம் பெறுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடும் யோகி, எல்லா களங்கங்களிலிருந்தும் தூய்மை பெற்று, இறுதியில், அனேக ஜென்மங்கள் பயின்ற பிறகு பரம கதியை அடைகிறான். (ப.கீ 6.45)

பிரபுபாதா : ஆம், எனவேஇது பயிற்சியைப் பற்றிய கேள்வி. ஒரு பிறந்த குழந்தைக்கு புகை பிடிக்கவோ, மது அருந்தவோ தெரியாது. ஆனால், அவன் சகவாசத்தால், மது அருந்தவும், புகைப்பிடிக்கவும், போதைப் பொருட்களையும் பழகிக் கொள்கிறான். அதுபோல் அது சகவாசத்தால் விளைந்தது. எனவே கேள்வி சகவாசத்தை பற்றியதுதான். ஸங்கா3த் ஸஞ்ஜாயதே காம:(ப.கீ 2.62) சகவாசம் நல்லதாக இருந்தால்.................. நாம் நல்ல சகவாசத்தை கொள்ளவில்லை என்றால், நம்முடைய எதிர்காலம் பாழாகி விடும். இது இங்கே விளக்கப்பட்டுள்ளது, அதாவது: "ஆனால், அந்த யோகி தன்னுடைய முன்னேற்றத்திற்காக நேர்மையான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால்......" வியாபாரத்தில் இருப்பதுபோல, பல வியாபாரிகளின் சங்கங்கள், குழுக்கள் இருக்கின்றன. அந்த வியாபார சங்கங்களில் ஒரு உறுப்பினர் ஆவதால் குறிப்பிட்ட அந்த வியாபாரம் பெருகும். மேலும் பங்குச்சந்தை இருக்கிறது. அதில் அவர்கள் தகவல்களையும், பங்குகளையும் பரிமாறிக் கொள்கின்றனர். எனவே சகவாசம் மிக முக்கியமானது. ஆக, நாம் இந்த திவ்ய உணர்வை வளர்த்துக் கொள்ள ஆர்வமுடன் இருப்போமானால், இந்த சங்கம் மட்டுமே- நாம் இந்த அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஸ்தாபித்துள்ளோம். இங்கு, ஒருவன் எப்படி உன்னத உணர்வை வளர்த்துக் கொள்வது எனும் முறையை மட்டும் கற்றுத் தருகிறோம். எனவே, இது ஒரு நல்ல வாய்ப்பு. நாம் அனைவரையும் இந்த எளிமையான வழிமுறைக்கு அழைக்கிறோம். ஹரே கிருஷ்ணா என்று உச்சரியுங்கள்,பிறகு நீங்களே உணர்வீர்கள். இந்த வழிமுறையில் எந்த கஷ்டமும் இல்லை. குழந்தைகள் கூட பங்கெடுக்கலாம், உண்மையில் அவர்கள் பங்கேற்கிறார்கள். இதற்கு எந்த முந்தைய தகுதியும் தேவையில்லை. அதாவது, நீங்கள் இந்த டிகிரி முடித்திருக்க வேண்டும், இந்த பரீட்சை, அது, இது, அது போல நீங்கள் என்னவாக இருந்தாலும் ,சரி நீங்கள், வந்து இந்த சங்கத்தில் இணைந்தால் நீங்கள் கிருஷ்ண உணர்வு உடையவர் ஆகலாம். இதுவே இந்த இயக்கத்தின் நன்மை. இது தெளிவானது. தயவு செய்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். தொடர்ந்து படிக்கவும். பொருளுரை?

நல்லறம் கொண்ட, செல்வம் மிகுந்த, அல்லது புனிதமான குடும்பத்தில் பிறப்பவன், யோகப் பயிற்சியை மேற்கொள்வதற்கு தனக்குள்ள சாதகமான சூழ்நிலையை உணர்கிறான். எனவே முற்றுப்பெறாத தனது செயலினை மன உறுதியுடன் அவன் மீண்டும் தொடர்கிறான். அவன் தன்னை முழுமையாக தூய்மைப்படுத்திக் கொள்கிறான். இறுதியில், எப்போது அவன் எல்லா களங்கங்களில் இருந்து விடுபடுகிறானோ அப்போது அவன் கிருஷ்ண உணர்வை அடைகிறான்

பிரபுபாதா : அதாவது..... புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், முழு முதற் கடவுள்.... கடவுள் தூய்மையானவர், அவரது ராஜ்யமும் தூய்மையானது. அதனை அடைய நினைப்பவர்களும் கூட தூய்மையாக இருக்க வேண்டும். அது மிக இயல்பானது. அதாவது, நீங்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட சங்கத்தில் இணைய விரும்பினால் நீங்கள் அதற்கு தகுதி உள்ளவர் ஆக வேண்டும். அதைப்போல...... இறைவனின் திருநாட்டை அடைய..... சில தகுதிகள் தேவை, அந்த தகுதி என்னவென்றால், நீங்கள் பௌதிக களங்கங்களோடு இருக்க கூடாது பௌதீக களங்கங்கள் என்றால் என்ன? புலனின்பமே அந்த பௌதிக களங்கம் ஆகும். கட்டுபாடற்ற புலனின்பம். இதுவே பௌதிக களங்கம். எனவே நீங்கள் உங்களை பௌதிக களங்கங்களில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் பிறகு, நீங்கள் இறைவனின் திருநாட்டில் நுழைவதற்கான தகுதி உடையவர் ஆவீர்கள். இந்த எல்லாவிதமான பௌதிக களங்கங்களிலிருந்தும் விடு பெறுவதற்கான வழியே, யோக முறையாகும். நீங்கள் எல்லா பௌதிக களங்கங்களுடன் தொடர்ந்துகொண்டே, 15 நிமிடம் பெயரளவு தியானத்தில் அமர்வது , யோக முறை என்று பொருள் அல்ல. நீங்கள் ஒரு குறிப்பிட்ட வியாதியிலிருந்து குணம் அடைய விரும்பினால், மருத்துவர் கூறும் பரிந்துரைகளை ஏற்க வேண்டும். அதுபோல, இந்த அத்தியாயத்தில், யோகப்பயிற்சி எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதற்கான வழிமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த பரிந்துரைக்கப்பட்ட வழிமுறையை நீங்கள் பின்பற்றினால், இந்த பௌதிக களங்கங்களிலிருந்து விடுபடலாம். பிறகு, நீங்கள் கடவுளுடன் இணைவதற்கான, தொடர்பு கொள்வதற்கான, நிலையில் இருக்கிறீர்கள். இதுவே கிருஷ்ண உணர்வாகும்.

நமது முறை உங்களை நேரடியாக கிருஷ்ணருடன் தொடர்புபடுத்தும். இது பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் சிறந்த பரிசாகும். ஒருவர் உடனடியாகவே கிருஷ்ணருடன் தொடர்பு கொள்ளலாம். ஏனென்றால், இறுதியாக நீங்கள் கிருஷ்ண உணர்வின் நிலைக்கு வந்து விட்டீர்கள். எனவே இந்த முறை, நேரடியானதும்,உட்னடியானதும், மேலும் நடைமுறைக்கு ஒத்துவருவதும் கூட. எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் கூட , இந்த நமது இயக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமாகவே, கிருஷ்ண உணர்வில் உயர்ந்த நிலையை அடைகின்றனர். இதை நடைமுறையில் காணலாம். எனவே, இந்த யுகத்தில், நேரடித் தொடர்பிற்கான வாய்ப்பினை மக்களுக்கு அளிக்க வேண்டும். எந்த மெதுவான வழிமுறையும் அவர்களுக்கு உதவாது. காரணம் வாழ்நாளே குறைவாகத்தான் உள்ளது. அவர்கள் அந்த அளவு அதிர்ஷ்டசாலிகளாகவும் இல்லை, அவர்களின் சகவாசமும் மிக மோசமானதாக உள்ளது. எனவே , நேரடித் தொடர்பு - ஹரேர் நாம(சை.சரி ஆதி 17.21) கிருஷ்ணரது ஸாந்நித்யம், அவரது திவ்ய நாமத்தில் உள்ளது. அதனைக் கேட்பதன் மூலம், நீங்கள் அவருடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். அதற்கான சாதனம் உங்களிடம் இருக்கிறது, கேட்டல் நீங்கள் "கிருஷ்ண" என்று கேட்பதனாலேயே, உடனடியாக களங்கமற்றவர் ஆகிறீர்கள்.