TA/Prabhupada 0777 - எந்த அளவிற்கு உமது பிரக்ஞையை வளர்த்துக்கொள்கிறீரோ- அந்த அளவிற்கு விடுதலை விரும்பியாவ



Lecture on SB 2.4.2 -- Los Angeles, June 26, 1972

விரூடாம் மமதாம் (ஸ்ரீ.பா 2.4.2), விரூடாம் நீங்கள் சில பெரிய மரங்கள் பல, பல ஆண்டுகளாக நிற்பதை பார்ப்பது போலவே. வேர் உறுதியாகப் பிடிக்கப்படுகிறது. நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், அனுபவித்திருக்கிறீர்கள். 10,000 ஆண்டுகளாக எழுந்து நிற்கிறது, ஆனால் வேர் பூமியைப் எதையும் போலவும், வலுவாகவும் கைப்பற்றுகிறது. இது விரூடாம், என்று அழைக்கப்படுகிறது, ஈர்ப்பு. உங்களுக்கு உணர்வு, மேம்பட்ட உணர்வு இருக்கும் போது, இங்கே ஒரு மணி நேரம் எழுந்து நிற்க ஒருவர் உங்களிடம் சொன்னால், அது மிகவும் தொந்தரவாக இருக்கும். நீங்கள் ஒரு மணி நேரம் எழுந்து நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், நீங்கள் மிகவும் சங்கட படுவீர்கள். ஆனால் இந்த மரம், அது விழிப்புணர்வை வளர்த்து கொள்ளாததால், இது 10,000 ஆண்டுகளாக நிற்கிறது, திறந்த வளிமண்டலத்தில், அனைத்து வகையான அதிக வெப்பம், மழை, பனிப்பொழிவு ஆகியவற்றை பொறுத்துக்கொள்ளும். ஆனால் இன்னும், அது பற்றிக்கொண்டு இருக்கிறது வளர்ந்த விழிப்புணர்வுக்கும் வளர்ச்சியடையாத விழிப்புணர்வுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். ஒரு மரத்திற்கும் விழிப்புணர்வு இருக்கிறது. நவீன அறிவியல், அவர்கள் நிரூபித்துள்ளனர், அவர்களுக்கு விழிப்புணர்வு இருக்கிறது. மரம் மூடப்பட்டிருக்கும், கிட்டத்தட்ட இறந்த நிலை.

ஆனால் அது இறந்துவிடவில்லை. உணர்வு இருக்கிறது. எனவே நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்கள் நனவை வளர்த்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். மக்கள் சமுதாயத்தில் சுதந்திரத்திற்காக போராடுவதை போல. ஆனால் விலங்கு சமுதாயத்தில், சுதந்திரம் என்றால் என்ன என்று அவைகளுக்குத் தெரியாது. நாம் சுதந்திரம் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் இன்னும், நாம் சுதந்திரத்திற்காக போராட உணர்வு உள்ளது. மேலும் அவர்கள் சாப்பிடுவதற்காக போராடுகிறார்கள். அவ்வளவுதான். எனவே இங்கே, பரீக்ஷித் மஹாராஜா ... இந்த விடுதலை ... கிருஷ்ண பக்தி என்றால் இந்த பௌதிக பந்தத்திலிருந்து விடுதலை. அதனால் அவர் மிகவும் முன்னேறினார்... ஏனென்றால், அவரது குழந்தைப் பருவத்திலிருந்தே, அவர் பிறந்ததிலிருந்து, தாயின் வயிற்றில் இருந்து, அவர் கிருஷ்ண பக்தியுடன் இருந்தார். ஆகவே, "கிருஷ்ணர் எனது குறிக்கோள்" என்று அவர் புரிந்து கொண்டவுடன், உடனடியாக, விரூடாம் மமதாம் ஜஹௌ, உடனடியாக கைவிட்டார். ஜஹௌ என்றால் "விட்டுவிட்டார்" என்று பொருள். அவர் என்ன வகையான விஷயங்களை விட்டுவிடுகிறார்? சாம்ராஜ்யத்தை. முன்னர் ஹஸ்தினபுரான் பேரரசர், அவர்கள் பூமியை, முழு உலகத்தையும் ஆண்டார்கள், பரீக்ஷித் மகாராஜா குறைந்தது, 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பரீக்ஷித் மகாராஜா மன்னராக இருந்தபோது.

அவர் உலகம் முழுவதும் பேரரசராக இருந்தார். அவர் சாம்ராஜ்யத்தை விட்டுவிடுகிறார். ஒரு சிறிய கிராமத்தையோ அல்லது வேறு எதையோ அல்ல. அந்த சாம்ராஜ்யமும் எந்த இடையூறும் இல்லாமல். அவர் மிகவும் சக்திவாய்ந்தவர், அவருக்கு எதிராக யாரும் செல்ல முடியாது. ராஜ்யே ச அவிகலே (ஸ்ரீ.பா. 2.4.2). அவிகலே. விகலா என்றால் "உடைந்த" அல்லது "தொந்தரவு" என்று பொருள். ஆனால் அவருடைய ராஜ்யம் ஒருபோதும் உடைக்கப்படவில்லை, தொந்தரவு செய்யப்படவில்லை. இப்போது உலகம் முழுவதும் உடைந்து தொந்தரவு அடைந்துள்ளது, தற்போதைய தருணத்தில். பல நாடுகள், சுதந்திர நாடுகள் உள்ளன. அதாவது உலகம் துண்டு துண்டாக உடைந்துள்ளது. முன்பு அத்தகைய துண்டு வேலைகள் எதுவும் இல்லை. ஒன்று. ஒரு உலகம், ஒரு ராஜா. ஒரே கடவுள், கிருஷ்ணர். ஒரு திருமறை, வேதங்கள். ஒரு நாகரிகம், வர்ணாஷ்ரம-தர்ம. வெகு தொலைவில் இல்லை. அவர்கள் வரலாற்றைக் கொடுக்கிறார்கள்... அவர்கள் பூமி அடுக்கைப் பற்றி ஆராய்கிறார்கள், ஆனால் அவர்கள் பல லட்சம் ஆண்டுகளிலிருந்து பூமி அடுக்கைப் படிக்கும் போது, ​​பல லட்ச கணக்கான ஆண்டுகளாக சரியான நாகரிகம் இருந்தது. சரியான நாகரிகம், கடவுள் உணர்வு. மகிழ்ச்சியான நாகரிகம். இப்போது அவை உடைந்து, கலங்குகின்றன. இது முன்னர் இல்லை.

எனவே இந்த விரூடாம் மமதாம். மமதா என்றால் "இது என்னுடையது" என்று பொருள். அது மமதா என்று அழைக்கப்படுகிறது. மமதா. மம என்றால் "என்னுடையது" என்று பொருள். "என்னுடையது" மற்றும் "நான்" ஆகியவற்றின் நனவு இது மமதா என்று அழைக்கப்படுகிறது. "நான் இந்த உடல், இந்த உடலோடு சேர்ந்த, எல்லாம் என்னுடையது. என் மனைவி, என் குழந்தைகள், எனது வீடு, எனது வங்கி இருப்பு, எனது சமுதாயம், எனது சமூகம், எனது தேசம், எனது நாடு - எனது. " இது மமதா என்று அழைக்கப்படுகிறது. இந்த மமதா அல்லது "என்" என்ற உணர்வு எவ்வாறு வளர்கிறது? ஒரு இயந்திரம் உள்ளது, மாயாவால் கையாளப்படுகிறது, மாயை ஆற்றல். ஆரம்பம். அது என்ன? ஈர்ப்பு. ஒரு ஆண் பெண்ணால் ஈர்க்கப்படுகிறான், பெண் ஆணால் ஈர்க்கப்படுகிறாள். இதுதான் அடிப்படைக் கொள்கை. இங்கே, இந்த பௌதிக உலகில், கடவுளுக்கு எந்த ஈர்ப்பும் இல்லை, ஆனால் ஈர்ப்பு இருக்கிறது. அந்த ஈர்ப்பு, ஒட்டு மொத்தமாக, பாலியல் ஈர்ப்பு. அவ்வளவுதான். முழு உலகமும், மனித சமூகம் மட்டுமல்ல, விலங்கு சமூகம், பறவை சமூகம், மிருக சமூகம், எந்த சமுதாயமும், எந்த உயிரினமும், ஈர்ப்பு என்பது பாலியல் உறவு சம்பந்தப்பட்டது. பும்ஸ: ஸ்த்ரியா மிதுனீ-பாவம் ஏதம் (ஸ்ரீ.பா 5.5.8) இங்குள்ள ஈர்ப்பு, ஈர்ப்பின் மையம், பாலுறவு எனவே, இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் அல்லது ஏதேனும், இளைய வயதில், பாலியல் தூண்டுதல் அதிகரிக்கும், அதனால் இனச்சேர்க்கை வேண்டும். ஒரு பெண் ஆணையும், ஒரு ஆண் பெண்ணையும் விரும்புகிறான். இதுதான் ஈர்ப்பு. நிபந்தனைக்குட்பட்ட ஆன்மாவை மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்பு இந்த மோசமான வாழ்க்கையில் பிணைப்பதற்கான அடிப்படைக் கொள்கை இது. இந்த ஈர்ப்பு.