TA/Prabhupada 1012 - கேட்கவும் மீண்டும் சொல்லவும், கேட்கவும் மீண்டும் சொல்லவும். நீங்கள் தயாரிக்க வேண்டிய



750620c - Arrival - Los Angeles

பிரபுபாதர்: ... இயற்கைக் குணம், போக்கு உள்ளது. இயற்கையாகவே நான் யாரையாவது நேசிக்க விரும்புகிறேன். இது இயற்கைக்கு மாறானது அல்ல. அந்த அன்பு கிருஷ்ணர் மீது வைக்கப்படும்போது, ​​அது பூரணமானது. மாயாவாதிகள், அவர்கள் விரக்தியில் இருப்பவர்கள்; எனவே அவர்கள் இந்த அன்பை பூஜ்ஜியமாக்க விரும்புகிறார்கள். கிருஷ்ணருடனான கோபியர்களின் அன்பை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இது இந்த பௌதிகத்தின் மற்றொரு பதிப்பு என்று அவர்கள் நினைக்கிறார்கள்... ஓ, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், ஹயக்ரீவா பிரபு? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் நன்றாக இருப்பதாக தெரிகிறீர்கள். கடைசியாக புதிய பிருந்தாபனில் நான் உங்களை பார்த்ததை விட நீங்கள் நன்றாக, பிரகாசமாக இருக்கிறீர்கள். கிருஷ்ணருக்கு சேவை செய்வதில் உங்களிடம் நிறைய திறமைகள் உள்ளன. அனைவருக்கும் உள்ளது என்று சொல்கிறேன். அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் உங்களைச் சந்தித்த ஆரம்பத்திலிருந்தே, தொகுக்குமாறு அறிவுறுத்தினேன். நமது 'பகவத் தரிசனம்' ஆரம்பம் அதுதான். அவர் நல்ல தட்டச்சு செய்பவரும் கூட. உங்களுக்கு அது தெரியுமா? (சிரிப்பு) அவர் நம் மக்கள் அனைவரையும் விட சிறந்தவர் என்று நினைக்கிறேன். அவரால் மிக விரைவாகவும் சரியாகவும் தட்டச்சு செய்ய முடியும். நமது குழுவில் ஹயக்ரீவ பிரபு மற்றும் ஸத்ஸ்வரூப மஹாராஜா ஆகியோர் நல்ல தட்டச்சு செய்பவர்கள் என்று நான் நினைக்கிறேன். ஜெயத்வைதா, நீங்களும் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், இல்லையா?

ஜெயத்வைதா: ஆம்.

பிரபுபாதர்: நீங்கள் நல்ல தட்டச்சு செய்பவரா? (சிரிப்பு) எனவே நீங்கள் ஏன் பாலி-மர்தானாவின் கட்டுரையை பிரசுரிக்கவில்லை?

ஜெயத்வைதா: பாலி-மர்தானாவின் கட்டுரை.

பிரபுபாதர்: ஆம்.

ஜெயத்வைதா: நாங்கள் காத்திருந்தோம். அதை பிரசுரிப்பது பொருத்தமானதா என்று எங்களுக்குத் தெரியவில்லை.

பிரபுபாதர்: அவர் நினைத்தார், ஏமாற்றமடைந்தார். அவர் பிரசுரித்தார். அவர் மிக நன்றாக எழுதியுள்ளார்.

ஜெயத்வைதா: அவர் நன்றாக எழுதியுள்ளாரா?

பிரபுபாதர்: ஆம்.

ஜெயத்வைதா: நாம் அதை வெளியிடலாமா?

பிரபுபாதர்: எனவே நாம் ...... ஆம், இதோ ... அது என்ன?

ப்ரஹ்மானந்த: "மாயையும் உண்மையும்," இரண்டு கட்டுரைகள்...

பிரபுபாதர்: அவர் மிக அழகாக படைத்துள்ளார். எனவே நாம் நம் மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

ஜெயத்வைதா: அதை பிரசுரிப்பது.

பிரபுபாதர்: ஆம். நம் மக்கள், நம் மக்கள் அனைவரும் எழுத வேண்டும். இல்லையெனில் அவர் தத்துவத்தைப் புரிந்து கொண்டார் என்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்வோம்? எழுதுவது என்றால் ஷ்ரவணம் கீர்தனம். ஷ்ரவணம் என்றால் ஒரு அதிகாரியிடம் இருந்து கேட்பது, அதை மீண்டும் கூறுவது. இது நம் வேலை. ஷ்ரவணம் கீர்தனம் விஷ்ணோ: (ஸ்ரீ.பா 7.5.23), விஷ்ணுவைப் பற்றி, எந்த அரசியல்வாதியோ அல்லது வேறு எந்த மனிதனுக்கோ அல்ல. ஷ்ரவணம் கீர்தனம் விஷ்ணோ: கிருஷ்ணர் அல்லது விஷ்ணு பற்றி. எனவே அது வெற்றி. கேட்டு மீண்டும் சொல்ல, கேட்க, மீண்டும் சொல்ல. நீங்கள் தயாரிக்க வேண்டியது இல்லை. நம்மில் எவரேனும், நான் பாகவதத்தில் கொடுத்த பொருளுரையை மீண்டும் உருவாக்கினால், நீங்கள் ஒரு நல்ல பேச்சாளராக மாறுவீர்கள். நான் என்ன செய்கிறேன்? நவீன மனிதனுக்குப் புரியும் வகையில் நான் அதையே செய்கிறேன், அதையே எழுதுகிறேன் இல்லையெனில் நாம் அதையே மீண்டும் செய்கிறோம். அவர்கள் ஒரே விஷயத்தை மீண்டும் செய்கிறார்கள், உணர்வு திருப்தி. புன: புனஷ் சர்வித-சர்வணானாம் (ஸ்ரீ.பா 7.5.30). ஆனால் அது பொருள் தன்மை என்பதால், அவர்கள் மகிழ்ச்சியைப் பெறுவதில்லை. ஆனால் , நாம் செய்வது ஆன்மீக விஷயம். அதே ஹரே கிருஷ்ண முழக்கமிடுகிறோம், வெறுமனே மீண்டும் சொல்கிறோம், ஆனால் நாம் ஆழ்நிலை ஆனந்தத்தைப் பெறுகிறோம். நாம் என்ன செய்கிறோம்? அதே "ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா." எனவே செயல்முறை ஒன்றே; பொருள் வேறு. எனவே நீங்கள் ஏன் பிரசுரித்து கொண்டு இருக்கிறீர்கள்? இப்போது பெரிய மனிதர்கள் அனைவரும் இங்கே இருக்கிறார்கள். நம் புத்தகங்கள் ஏன் பின்னால் உள்ளன? ஏன்? இங்கே பதிப்பாசிரியர்கள் இருக்கிறார்கள். எந்த பற்றாக்குறையும் இருப்பதாக நினைக்கவில்லை.

ராமேஸ்வரா: இப்போது பற்றாக்குறை இல்லை.

பிரபுபாதர்: ஹூ? முன்பு இருந்ததா?

ராமேஸ்வரா: புத்தகங்களை மிக விரைவாக அச்சிட விரும்பினால், புதிய புத்தகங்களை அமெரிக்காவில் அச்சிடப்பட வேண்டும்.

பிரபுபாதர்: அங்கே மறுபதிப்பு ....

ராமேஸ்வரா: ஆம், நாம் அதை செய்ய முடியும்.

பிரபுபாதர்: அப்படியானால் அவர்களுக்கு சாதாரணமாக சில புத்தகங்களையும் ஏன் கொடுக்கக்கூடாது?

ராமேஸ்வரா: இந்த ஆண்டு ஜப்பானில் நாம் அவர்களுக்கு நிறைய வியாபாரம் கிடைக்குமாறு செய்கிறோம்.

பிரபுபாதர்: ஆம், ஆம். நாம் அவர்களை மிக நல்லமுறையில் கையாள வேண்டும். அவர்கள் ஆரம்பத்தில் உதவியுள்ளனர். ஆம். நான் அவர்களுக்கு ஆரம்பத்தில் 5,000 டாலர்கள் மட்டுமே கொடுத்தேன், நான் 52,000 டாலர்களுக்கு ஆர்டர் கொடுத்தேன், ஆனால் அவர்கள் (பிரசுரித்து) வழங்கினர். அவர்களுக்கு பணம் கிடைத்தது. நாம் அவர்களை ஏமாற்ற மாட்டோம் என்று அவர்கள் நம்பினார்கள். எனவே நம் உறவு மிகவும் அருமை. எனவே அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெண், ஜப்பானியர்கள், அவர்கள் நம் வெளியீட்டை விரும்புகிறார்கள்.

ராமேஸ்வரா: பெண். மூல-ப்ரக்ருதி.

பிரபுபாதர்: ஹூ?

ராமேஸ்வரா: ஹவாய், மூல-ப்ரக்ருதியில் உங்களைப் பார்த்த அந்த பெண்.

பிரபுபாதர்: ஆம். அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார். மூல-ப்ரக்ருதி. யதுபர பிரபு எங்கே? எங்கே?

ஜயதீர்த: அவர் இங்கேயே இருக்கிறார்.

பிரபுபாதர்: ஓ. நீங்கள் இப்போது நன்றாக இருக்கிறீர்களா?

யதுபரா: ஆம். நான் மிகவும் முன்னேற்றமடைந்தேன்.

பிரபுபாதர்: அது நல்லது. எனவே எல்லோரும் நன்றாக உணர்கிறீர்களா?

பக்தர்கள்: ஆம்.

பிரபுபாதர்: நீங்களும் நன்றாக இருக்கிறீர்களா?

விஷாகா: இப்போது நான் நன்றாக இருக்கிறேன்.

பிரபுபாதர்: ஹூ?

விஷாகா: இப்போது நான் நன்றாக இருக்கிறேன்.

பிரபுபாதர்:(சிரிக்கிறார்) அது நல்லது.